ETV Bharat / state

திருப்பத்தூரில் புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு!

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் இன்று (அக். 20) ஒரே நாளில் 47 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Oct 20, 2020, 10:09 PM IST

திருப்பத்தூரில் இன்று புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு!
திருப்பத்தூரில் இன்று புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு!

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 47 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்கு உள்ளானவர்களது குடியிருப்புப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாணியம்பாடி நகராட்சிப் பகுதியை கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதாக அறிய முடிகிறது.

அங்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை ஆறாயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டும், ஐந்தாயிரத்து 784 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். மாவட்டத்தில் 1,21,663 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இரண்டாயிரத்து 762 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 117 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 47 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்கு உள்ளானவர்களது குடியிருப்புப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாணியம்பாடி நகராட்சிப் பகுதியை கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதாக அறிய முடிகிறது.

அங்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை ஆறாயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டும், ஐந்தாயிரத்து 784 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். மாவட்டத்தில் 1,21,663 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இரண்டாயிரத்து 762 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 117 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.