ETV Bharat / state

திருப்பூரில் முன்பகை காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை - 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 9:32 AM IST

Tiruppur Murder Case: திருப்பூரில் முன்பகை காரணமாக, இளைஞரை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tiruppur Murder Case
திருப்பூரில் முன்பகை காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை
திருப்பூரில் முன்பகை காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

திருப்பூர்: நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளியங்காடு பகுதி அருகில் உள்ள திருவிக நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு காவல் துறையினர் வெட்டுப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு உயிரிழந்த பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மோப்பநாய் ஹண்டர் சிறிது தூரம் சென்று மீண்டும் கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கே வந்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து போன பாலமுருகன் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இக்கொலையானது பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலை காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்தைப் பெற நண்பனைக் கொலை செய்து நாடகமாடியவர் கைது..! சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்..!

திருப்பூரில் முன்பகை காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

திருப்பூர்: நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளியங்காடு பகுதி அருகில் உள்ள திருவிக நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு காவல் துறையினர் வெட்டுப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு உயிரிழந்த பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மோப்பநாய் ஹண்டர் சிறிது தூரம் சென்று மீண்டும் கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கே வந்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து போன பாலமுருகன் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இக்கொலையானது பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலை காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்தைப் பெற நண்பனைக் கொலை செய்து நாடகமாடியவர் கைது..! சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.