ETV Bharat / state

விஷ வாயு தாக்கி வட இந்திய இளைஞர்கள் பலி...!

author img

By

Published : Apr 14, 2019, 9:32 PM IST

திருப்பூர்: கழிவு தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 4 வட மாநில தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட இந்திய இளைஞர்கள் பலி

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாய சலவை ஆலைகளில் சேரும் கழிவுநீர் அடைத்து வைத்திருந்த தொட்டியை சுத்தம் செய்ய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பருக் அகமது என்பவர் உள்ளே சென்ற நிலையில் மயங்கி விழுந்தார். இவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக அன்வர் உசேன், அபு, தில்வார் உசேன் என உள்ளே இறங்கிய அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். இறுதியில் விஷ வாய்வு தாக்கி மயங்கிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட இந்திய இளைஞர்கள் பலி

இதனையடுத்து நால்வர் உடல்களையும் வீரபாண்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் ரசாயனக் கழிவுகள் சேரும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைபடுத்தியதே உயிரிழப்பிற்கு காரணம். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி சாய சலவை ஆலை செயல்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , 4 பேர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாய சலவை ஆலைகளில் சேரும் கழிவுநீர் அடைத்து வைத்திருந்த தொட்டியை சுத்தம் செய்ய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பருக் அகமது என்பவர் உள்ளே சென்ற நிலையில் மயங்கி விழுந்தார். இவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக அன்வர் உசேன், அபு, தில்வார் உசேன் என உள்ளே இறங்கிய அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். இறுதியில் விஷ வாய்வு தாக்கி மயங்கிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட இந்திய இளைஞர்கள் பலி

இதனையடுத்து நால்வர் உடல்களையும் வீரபாண்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் ரசாயனக் கழிவுகள் சேரும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைபடுத்தியதே உயிரிழப்பிற்கு காரணம். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி சாய சலவை ஆலை செயல்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , 4 பேர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .

திருப்பூர் சாய சலவை ஆலை கழிவு தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 4 வட மாநில தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் - உரிய விசாரனைக்கு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சாய ஆலையை ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் பேட்டி

கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில்  யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் வார விடுமுறை நாளான இன்று சாய சலவை ஆலைகள் சேகரமாகும் கழிவு நீரை அடைத்து வைத்திருந்த தொட்டியை இன்று சுத்தம் செய்ய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பருக் அகமது என்பவர் உள்ளே சென்ற நிலையில் மயங்கி விழுந்தார். இவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக அன்வர் உசேன், அபு, தில்வார் உசேன் என உள்ளே இறங்கிய நிலையில் அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உள்ளே விழுந்தவர்களை மேலே தூக்கிய நிலையில் மூவர் உயிரிழந்தனர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த தில்வார் உசேனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து நால்வர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த வீரபாண்டி போலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் ரசாயன கழகவுகள் சேகரமாகும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைபடுத்தியது தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் சென்பகவள்ளி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி ஆலை செயல்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , 4 பேர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.