ETV Bharat / state

மனைவி கழுத்தறுத்து கொலை: கணவன் தப்பியோட்டம்! - மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

திருப்பூர்: பல்லடம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கணவன் தப்பியோட்டம்
கணவன் தப்பியோட்டம்
author img

By

Published : Aug 7, 2020, 2:13 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு ஜெபா, மகிமா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் அருகிலுள்ள பணியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று (ஆக.7) காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியில் வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு அருள்மணி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாடசாமியை காணவில்லை.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் அருள்மணியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அருள்மணியை, கணவன்தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு காரணமான மாடசாமி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, அவரை செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டி பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு ஜெபா, மகிமா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் அருகிலுள்ள பணியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று (ஆக.7) காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியில் வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு அருள்மணி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாடசாமியை காணவில்லை.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் அருள்மணியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அருள்மணியை, கணவன்தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு காரணமான மாடசாமி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, அவரை செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டி பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.