திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் அதன் மாநில செய்தி தொடர்பாளர் தாதா நாயக்கர் மனு அளித்தார்.
அந்த மனுவில், "தமிழ் தேசியம் என்ற பெயரில் தெலுங்கு சமுதாய மக்களை வந்தேறிகள் என சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இனம், மொழி ரீதியான பிரிவினையை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் உள்ளது.
எனவே சமூக வலைதளங்களில் இதுபோன்ற பதிவுகளை பதிவிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புகழேந்தி, புரட்சி தமிழகம் கட்சி மூர்த்தி உள்ளிட்டோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க முறைகேடு: விசாரணை செய்யக்கோரி மனு!