திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54ஆவது வார்டு வீரபாண்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலைகள், பல்வேறு பகுதிகளில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாது சாலைகளில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.