ETV Bharat / state

பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் தந்தை கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 9:43 AM IST

Palladam murder case: பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசன் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னதாக அவரது தந்தையையும், திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Palladam murder case
பல்லடம் கொலை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் தந்தை கைது

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் மோகன்ராஜ் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 3ஆம் தேதி இரவு மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தனர்.

மேலும், அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் மனைவி ரத்தினாம்பாள் ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தப்பியோட முயன்ற வெங்கடேசனை போலீசார் இரண்டு கால்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். 4 பேர் கொலை காரணமாக பல்லடம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. பா.ஜ.க.வினர், பொதுமக்கள் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 4 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று வழங்கினார்.

இதனிடையே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வெங்கடேசனின் தந்தை ஐயப்பனையும் (வயது 52) திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். தலைமறைவாக இருக்கும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவரும் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: காலை உணவு திட்டத்தில் சாதிய பாகுபாடு.. ஈடிவி பாரத்தின் கள ஆய்வு ரிப்போர்ட்!

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் மோகன்ராஜ் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 3ஆம் தேதி இரவு மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தனர்.

மேலும், அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் மனைவி ரத்தினாம்பாள் ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தப்பியோட முயன்ற வெங்கடேசனை போலீசார் இரண்டு கால்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். 4 பேர் கொலை காரணமாக பல்லடம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. பா.ஜ.க.வினர், பொதுமக்கள் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 4 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று வழங்கினார்.

இதனிடையே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வெங்கடேசனின் தந்தை ஐயப்பனையும் (வயது 52) திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். தலைமறைவாக இருக்கும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவரும் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: காலை உணவு திட்டத்தில் சாதிய பாகுபாடு.. ஈடிவி பாரத்தின் கள ஆய்வு ரிப்போர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.