மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியிறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமை தாங்கினார்.
![Tamil Nadu Thowheed Jamath protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-tawheedjamaatprotest-vis-7204381_25122020195007_2512f_1608906007_49.jpg)