ETV Bharat / state

3 வயது குழந்தை கடத்தல் விவகாரம் - இளம்பெண் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே மூன்று வயது குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

author img

By

Published : Jan 29, 2020, 7:48 PM IST

child kidnap_sp press meet திருப்பூர் மூன்று வயது குழந்தை கடத்தல் விவகாரம் பல்லடம் மூன்று வயது குழந்தை கடத்தல் விவகாரம் Tiruppur Child Kidnap Issue Palladam Child Kidnap Issue குழந்தை கடத்தல் விவகாரம் Child Kidnap Issue
Tiruppur Child Kidnap Issue

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார்.

மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்திலிருந்து குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கோயிலிலிருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துவந்தார். வீட்டு வேலை, குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக சுடலை ராஜனிடம் மாரியப்பன் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்த குழந்தை, அந்த பெண் இருவரும் மாயமாகினர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் சுடலை ராஜன் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்துவருவதும் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட மூன்று வயது குழந்தை

இதுகுறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குழந்தை வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கடத்தப்படவில்லை. தனிமையான சூழலில் வசித்து வந்த அந்த பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் குழந்தையைக் காட்டி இலவசமாக பயணம் செய்ய தூக்கிச்சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" என்றார்.

இதையும் படிங்க:

63 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார்.

மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்திலிருந்து குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கோயிலிலிருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துவந்தார். வீட்டு வேலை, குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக சுடலை ராஜனிடம் மாரியப்பன் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்த குழந்தை, அந்த பெண் இருவரும் மாயமாகினர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் சுடலை ராஜன் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்துவருவதும் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட மூன்று வயது குழந்தை

இதுகுறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குழந்தை வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கடத்தப்படவில்லை. தனிமையான சூழலில் வசித்து வந்த அந்த பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் குழந்தையைக் காட்டி இலவசமாக பயணம் செய்ய தூக்கிச்சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" என்றார்.

இதையும் படிங்க:

63 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

Intro:பல்லடம் 3 வயது பெண் குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் பேட்டி.


Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்கத்தை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ள நிலையில், சுடலை ராஜனின் மனைவி குழந்தை பிறந்த பின்பு சுடலைராஜனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்தில் இருந்து குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் இருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக மாரியப்பன் சுடலை ராஜனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த குழந்தை மற்றும் அந்த பெண் இருவரும் மாயமாகி உள்ளனர். பல்லடம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார் கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து திருப்பூர் கோவை ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கிய நிலையில் நேற்றிரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் வந்த பெண் இருப்பது கொண்ட போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மீறி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தவர் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணிப்பதற்காக குழந்தையை தூக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல், குழந்தையே வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் நடத்தப்படவில்லை எனவும் யாருமில்லாத அந்த பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.