ETV Bharat / state

'ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பயனில்லை... பேருந்து வசதி இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்'

author img

By

Published : Jun 29, 2020, 3:15 PM IST

"இப்போது கம்பெனிகள் இயங்கலாம் என்ற அரசின் அறிவிப்பு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. இருப்பினும், கம்பெனி பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. என்னிடமும் வாகனங்களும் இல்லை. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. அரசு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே என்னால் வேலைக்குச் செல்ல முடியும்"

tirupur-knitwear-workers
tirupur-knitwear-workers

பின்னலாடை துறையில் ஏற்றுமதியின் மூலம் ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி, உள்நாட்டுப் பின்னலாடை உற்பத்தியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் எனப் பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னோடி நகராக விளங்கிவந்த திருப்பூர், தற்பொழுது கரோனா பாதிப்பால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் மொத்த காட்டன் உற்பத்தியில் 90 விழுக்காடு அளவிலான காட்டன் பின்னலாடைகள் திருப்பூரில் தான் தயாராகின்றன. 40 நாள்களுக்கு மேலான ஊரடங்கு பின்னலாடை தொழில் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏராளமான தென் மாவட்ட மக்களும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்த இத்தொழில் ஏறக்குறைய அதலபாதளத்துக்குள் சென்றுள்ளது என்றே கூறலாம். இதிலிருந்து மீள குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்கின்றனர் அத்துறை சார்ந்தவர்கள்.

இத்தொழிலை நம்பி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

நிறுவனத்தின் பேருந்துகள்
நிறுவனத்தின் பேருந்துகள்

திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பல்லடம், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் பேருந்து மூலம் தொழிலாளர்கள் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது பேருந்து போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், அவர்களால் பணிக்குச் செல்ல முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பணியாளர்களை, வாகனங்கள் மூலம் அழைத்துவந்தாலும், சிறிய நிறுவனங்கள் பணியாளர்களை அழைத்துவர முடியாமல் திணறிவருகின்றன. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பணி செல்ல முடியாமல் தவிப்பதாக பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், “நான் கம்பளி தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கம்பெனி எதுவும் திறக்கப்படாததால், வேலையிழந்து அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினேன்.

இப்போது கம்பெனிகள் இயங்கலாம் என்ற அரசின் அறிவிப்பு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. இருப்பினும், கம்பெனி பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. என்னிடமும் வாகனங்களும் இல்லை. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. அரசு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே என்னால் வேலைக்குச் செல்ல முடியும்” என்றார் வேதனையோடு.

இதுதொடர்பாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவன இயக்குநர் பிரகாஷ் மூர்த்தியிடம் கேட்டோம். அவர், “40 நாள்களுக்குப் பிறகு கம்பெனிகளை இயக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

பேருந்து வசதி இல்லாததால் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகக் கூறுகிறீர்கள். எங்கள் நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என அநேக பேர் பணிபுரிகின்றனர். திருப்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள தொழிலாளர்களை எங்கள் நிறுவன வாகனங்களில் அழைத்துவருகிறோம். திருப்பூரில் தங்கி பணிபுரிந்துவந்த வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தற்போது திருப்பூரில்தான் இருக்கிறார்களா, ஊருக்குச் சென்றுவிட்டார்களா என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

பேருந்து வசதி இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்

ஆகவே, குறைவான தொழிலாளர்களைக் கொண்டு எவ்வாறு உற்பத்தி பணி மேற்கொள்வது குறித்து திட்டமிட்டு வருகிறோம். வெளிமாவட்ட மக்களுக்கு உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டதற்குப் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க முடியும்” என்றார்.

தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவால் பின்னலாடை துறையில் ரூ.10 ஆயிரம் கோடி பாதிப்பு - சீர்த்திருத்தம் மேற்கொள்ளுமா அரசு?

பின்னலாடை துறையில் ஏற்றுமதியின் மூலம் ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி, உள்நாட்டுப் பின்னலாடை உற்பத்தியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் எனப் பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னோடி நகராக விளங்கிவந்த திருப்பூர், தற்பொழுது கரோனா பாதிப்பால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் மொத்த காட்டன் உற்பத்தியில் 90 விழுக்காடு அளவிலான காட்டன் பின்னலாடைகள் திருப்பூரில் தான் தயாராகின்றன. 40 நாள்களுக்கு மேலான ஊரடங்கு பின்னலாடை தொழில் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏராளமான தென் மாவட்ட மக்களும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்த இத்தொழில் ஏறக்குறைய அதலபாதளத்துக்குள் சென்றுள்ளது என்றே கூறலாம். இதிலிருந்து மீள குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்கின்றனர் அத்துறை சார்ந்தவர்கள்.

இத்தொழிலை நம்பி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

நிறுவனத்தின் பேருந்துகள்
நிறுவனத்தின் பேருந்துகள்

திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பல்லடம், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் பேருந்து மூலம் தொழிலாளர்கள் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது பேருந்து போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், அவர்களால் பணிக்குச் செல்ல முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பணியாளர்களை, வாகனங்கள் மூலம் அழைத்துவந்தாலும், சிறிய நிறுவனங்கள் பணியாளர்களை அழைத்துவர முடியாமல் திணறிவருகின்றன. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பணி செல்ல முடியாமல் தவிப்பதாக பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், “நான் கம்பளி தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கம்பெனி எதுவும் திறக்கப்படாததால், வேலையிழந்து அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினேன்.

இப்போது கம்பெனிகள் இயங்கலாம் என்ற அரசின் அறிவிப்பு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. இருப்பினும், கம்பெனி பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. என்னிடமும் வாகனங்களும் இல்லை. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. அரசு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே என்னால் வேலைக்குச் செல்ல முடியும்” என்றார் வேதனையோடு.

இதுதொடர்பாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவன இயக்குநர் பிரகாஷ் மூர்த்தியிடம் கேட்டோம். அவர், “40 நாள்களுக்குப் பிறகு கம்பெனிகளை இயக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

பேருந்து வசதி இல்லாததால் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகக் கூறுகிறீர்கள். எங்கள் நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என அநேக பேர் பணிபுரிகின்றனர். திருப்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள தொழிலாளர்களை எங்கள் நிறுவன வாகனங்களில் அழைத்துவருகிறோம். திருப்பூரில் தங்கி பணிபுரிந்துவந்த வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தற்போது திருப்பூரில்தான் இருக்கிறார்களா, ஊருக்குச் சென்றுவிட்டார்களா என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

பேருந்து வசதி இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்

ஆகவே, குறைவான தொழிலாளர்களைக் கொண்டு எவ்வாறு உற்பத்தி பணி மேற்கொள்வது குறித்து திட்டமிட்டு வருகிறோம். வெளிமாவட்ட மக்களுக்கு உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டதற்குப் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க முடியும்” என்றார்.

தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவால் பின்னலாடை துறையில் ரூ.10 ஆயிரம் கோடி பாதிப்பு - சீர்த்திருத்தம் மேற்கொள்ளுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.