ETV Bharat / state

ஜல்லிப்பட்டியில் முதலமைச்சருக்கு வாட்ச் டவர் கண்காணிப்பு

திருப்பூர்: சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி ஜல்லிப்பட்டியில் நடைபெற்ற முதலமைச்சர் பரப்புரையின் போது, வாட்ச் டவர் அமைத்து காவல் துறையினர் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

author img

By

Published : May 1, 2019, 11:27 PM IST

கண்காணிப்பு பணியில் காவல்துறையினர்

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும்19ஆம் தேதி நடப்பதையொட்டி, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, சூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் தனது பரப்புரைய துவங்கினார். மாலை ஐந்து மணிக்கு மேல்தான் முதலமைச்சர் பரப்புரை செய்ய வந்தார். அதுவரை கூட்டம் கலையாமல் இருக்க ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜல்லிபட்டி முதலமைச்சர் பரப்புரை

வாட்ச் டவர் கண்காணிப்பு:

முதலமைச்சர் பழனிசாமி மக்களவைத் தேர்தலின்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பல முறை வந்துள்ளார். அப்போது, முதலமைச்சருக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், இன்று ஜல்லிப்பட்டியில் நடந்த பரப்புரையில் வாட்ச் டவர் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் மக்களவைத் தேர்தலின்போது கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும்19ஆம் தேதி நடப்பதையொட்டி, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, சூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் தனது பரப்புரைய துவங்கினார். மாலை ஐந்து மணிக்கு மேல்தான் முதலமைச்சர் பரப்புரை செய்ய வந்தார். அதுவரை கூட்டம் கலையாமல் இருக்க ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜல்லிபட்டி முதலமைச்சர் பரப்புரை

வாட்ச் டவர் கண்காணிப்பு:

முதலமைச்சர் பழனிசாமி மக்களவைத் தேர்தலின்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பல முறை வந்துள்ளார். அப்போது, முதலமைச்சருக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், இன்று ஜல்லிப்பட்டியில் நடந்த பரப்புரையில் வாட்ச் டவர் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் மக்களவைத் தேர்தலின்போது கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜல்லிப்பட்டியில், முதல்வர் துவக்கிய பிரச்சார பயணம் ஆடல் பாடலுடன் களைகட்டியது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும்19ம் தேதி நடப்பதையொட்டி, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, சூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். முன்னதாக முதல்வர் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக  கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் இருந்து மதியம் முதலே ஆட்களை வாகனங்களில் திரட்டி வந்தனர். முதல்வர் வரும் போது வழி நெடுகிலும் மக்கள் இருக்கவேண்டும் என்று சாலையின் இருபுறங்களிலும் மக்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு மேல் தன் முதல்வர் பிரச்சாரம் செய்ய வந்தார், அதுவரை கூட்டம் கலையாமல் இருக்க ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலை நிகழ்ச்சியில்,எம்ஜிஆர், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் வேடமணிந்து வந்து நடனமாடிய கலைஞர்கள், கூட்டத்தை கலையாமல் பார்த்துக்கொண்டனர். 

வாட்ச் டவர் கண்காணிப்பு:
தமிழக முதல்வர் பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் போதும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பல முறை வந்துள்ளார், அப்போது முதல்வருக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இன்று ஜல்லிப்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் வாட்ச் டவர் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இது வரை இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.