திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுல்தான்பேட்டை அருகே திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெரியகுயிலியிலிருந்து காமநாயக்கன்பாளையத்துக்கு ஜல்லிக்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நேருக்கு நேராக அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன், நடத்துனர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தினால் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை