ETV Bharat / state

அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் காயம்!

author img

By

Published : Jan 23, 2020, 5:37 PM IST

திருப்பூர்: பல்லடம் சுல்தான் பேட்டையில் அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர்
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுல்தான்பேட்டை அருகே திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெரியகுயிலியிலிருந்து காமநாயக்கன்பாளையத்துக்கு ஜல்லிக்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நேருக்கு நேராக அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன், நடத்துனர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தினால் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுல்தான்பேட்டை அருகே திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெரியகுயிலியிலிருந்து காமநாயக்கன்பாளையத்துக்கு ஜல்லிக்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நேருக்கு நேராக அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன், நடத்துனர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தினால் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை

Intro:பல்லடம் சுல்தான் பேட்டையில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதி விபத்து. அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உட்பட 8 பேர் காயம். பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த திருப்பூர் கோவை மாவட்ட எல்லையான சுல்தான்பேட்டை அருகே திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.பேருந்தை வேடியப்பன் என்ற ஓட்டுனர் இயக்கி வந்தார்.பெரியகுயிலியில் இருந்து காமநாயக்கன்பாளையத்துக்கு ஜல்லிக்கல் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.லாரியை ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அ சுல்தான்பேட்டை அருகே வந்த போது அரசு பேருந்தும் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் மற்றும் நடத்துனர், பயணிகள் செல்வகுமார், மோகனா உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த சுல்தான் பேட்டை போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சுல்தான் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.