ETV Bharat / state

இஎஸ்ஐ அலுவலகத்தில் தமிழ் இல்லை: சிஐடியு ஆர்ப்பாட்டம் - திருப்பூர் சிஐடியு போராட்டம்

திருப்பூ:ர் இஎஸ்ஐ அலுவலகத்தில் சந்தேகங்களைப் பெற இலவச சேவை எண்ணில் தமிழ் மொழி இல்லாததைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் இஎஸ்ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Citu protest
Citu protest
author img

By

Published : Oct 12, 2020, 3:15 PM IST

திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இஎஸ்ஐ சேவைகள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுப் பெற இஎஸ்ஐ நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இலவச சேவை எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே தொடர்பு மொழியாக இருப்பதாகவும், நேரில் சந்தேகங்களைக் கேட்கச் சென்றால் அங்கு தமிழ் தெரியாத இந்தி அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, சிஐடியு தொழற்சங்கத்தினர்,

  • உடனடியாக சேவை தொடர்பு எண்ணில் தமிழ் மொழியைக் கொண்டுவர வேண்டும்,
  • திருப்பூரில் உள்ள இஎஸ்ஐ அலுவலகததில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இஎஸ்ஐ அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இஎஸ்ஐ சேவைகள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுப் பெற இஎஸ்ஐ நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இலவச சேவை எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே தொடர்பு மொழியாக இருப்பதாகவும், நேரில் சந்தேகங்களைக் கேட்கச் சென்றால் அங்கு தமிழ் தெரியாத இந்தி அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, சிஐடியு தொழற்சங்கத்தினர்,

  • உடனடியாக சேவை தொடர்பு எண்ணில் தமிழ் மொழியைக் கொண்டுவர வேண்டும்,
  • திருப்பூரில் உள்ள இஎஸ்ஐ அலுவலகததில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இஎஸ்ஐ அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.