ETV Bharat / state

சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதைத் தடுக்கக்கோரி மனு

author img

By

Published : Jan 20, 2020, 4:48 PM IST

திருப்பூர்:  சொந்த வாகனங்களை வாடைக்கு ஓட்டுவதைத் தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

car-drivers
car-drivers

திருப்பூர் மாவட்டத்தில் வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமான ஓட்டுநர்கள் உள்ளனர். ஆனால் சொந்த தேவைக்காகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தும் நிலை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இதனால் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு மட்டுமின்றி சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேரந்த கருப்பு சாமி என்பவர் தனது சொந்த வாகனத்தில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றுள்ளார். இது குறித்து வாடகை கார் ஓட்டுநர் சக்திவேல் என்பவரிடம் விசாரித்தபோது, 'இது என்னுடைய கார் நான் யாரை வேண்டுமானாலும் ஏற்றிச் செல்வேன்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வாடகை கார் ஓட்டுநர் சக்திவேலை தாக்கியதோடு, மட்டுமல்லாமல் காரை ஏற்றிக் கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடுக்கக் கோரி கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் மனு

இது தொடர்பாக ஓட்டுநர் சக்திவேல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திவரும் வாகன ஓட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!

திருப்பூர் மாவட்டத்தில் வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமான ஓட்டுநர்கள் உள்ளனர். ஆனால் சொந்த தேவைக்காகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தும் நிலை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இதனால் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு மட்டுமின்றி சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேரந்த கருப்பு சாமி என்பவர் தனது சொந்த வாகனத்தில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றுள்ளார். இது குறித்து வாடகை கார் ஓட்டுநர் சக்திவேல் என்பவரிடம் விசாரித்தபோது, 'இது என்னுடைய கார் நான் யாரை வேண்டுமானாலும் ஏற்றிச் செல்வேன்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வாடகை கார் ஓட்டுநர் சக்திவேலை தாக்கியதோடு, மட்டுமல்லாமல் காரை ஏற்றிக் கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடுக்கக் கோரி கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் மனு

இது தொடர்பாக ஓட்டுநர் சக்திவேல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திவரும் வாகன ஓட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!

Intro:சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Body:திருப்பூர் மாவட்டத்தில் வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமான ஓட்டுநர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக ஒரு சிலர் தங்களது சொந்த வாகனங்களை விதிமுறைக்கு மாறாக வாடகைக்கு ஓட்டி செல்கின்றனர் இதன் காரணமாக வாடகை கார் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பு சாமி என்பவர் தனது சொந்த வாகனத்தில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றுள்ளார் இதுகுறித்து வாடகை கார் ஓட்டுனர்கள் அவரிடம் கேட்டபோது இது என்னுடைய கார் நான் யாரை வேண்டுமானாலும் ஏற்றி செல்வேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் இது குறித்து கேட்ட வாடகை கார் ஓட்டுனர் சக்திவேல் என்பவரை தாக்கியதோடு, மட்டுமல்லாமல் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது இது குறித்து கார் ஓட்டுநர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் இதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.