ETV Bharat / state

பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை, கொலையாளி யார்? - விசாரணையில் காவல் துறை!

திருப்பூர்: கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி அடையாளம் தெரியாத நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

author img

By

Published : Nov 8, 2019, 7:41 PM IST

Baniyan worker slaughtered with stone

திருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி(33). பனியன் தொழிலாளியான இவர், நேற்றிரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், விடியும் வரை வீட்டுக்கு அவர் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மருதுபாண்டி வசிக்கும் அதே பகுதியில் அமைந்துள்ள மாநகர் நல மைய வளாகத்தில், அவரது உடல் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சோதனை செய்ததில், மருதுபாண்டி அடையாளம் தெரியாத நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பனியன் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்

மேலும் கல்லால் அடித்ததால் அவரின் உடல் முழுவதும் சிதைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் மருதுபாண்டி உடலைக் கைப்பற்றி, அவரைக் கொலை செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூரில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்த சம்பவம்: தாய், மகன் கைது!

திருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி(33). பனியன் தொழிலாளியான இவர், நேற்றிரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், விடியும் வரை வீட்டுக்கு அவர் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மருதுபாண்டி வசிக்கும் அதே பகுதியில் அமைந்துள்ள மாநகர் நல மைய வளாகத்தில், அவரது உடல் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சோதனை செய்ததில், மருதுபாண்டி அடையாளம் தெரியாத நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பனியன் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்

மேலும் கல்லால் அடித்ததால் அவரின் உடல் முழுவதும் சிதைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் மருதுபாண்டி உடலைக் கைப்பற்றி, அவரைக் கொலை செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூரில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்த சம்பவம்: தாய், மகன் கைது!

Intro:திருப்பூர் மாநகர் நல மையத்தில் பனியன் தொழிலாளி கல்லால் அடித்து கொலை.Body:திருப்பூர் கே.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் மருதுபாண்டி ( வயது33). பனியன் தொழிலாளி. இன்னும் திருமணமாகாத இவர் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு சென்று உள்ளார். ஆனால் விடியும் வரை திரும்பி வரவில்லை. இந்தநிலையில் அப்பகுதி பொதுமக்கள் மருதுபாண்டி கே வி ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகர் நல மைய வளாகத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருது பாண்டி குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கு மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மருதுபாண்டியன் தங்கத்தை பார்வையிட்டனர். அப்போது மருதுபாண்டி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கல்லால் அடித்த தினம் உலகம் முழுவதும் சிதைக்கப்பட்டு மாநில மைய வளாகம் ரத்த வெள்ளமாக இருந்தது. இதையடுத்து போலீசார் மருதுபாண்டியன் பிணத்தை கைப்பற்றி கொலை செய்த விவரம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.