ETV Bharat / state

கொரோனா வைரஸ் - மருந்து தயாரித்த மாணவர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: கொரோனா வைரஸுக்கு மருந்து தயாரித்துள்ள மாணவர் ஒருவர், அதனை மருத்துவமனையில் ஆய்வு செய்ய வலியுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

author img

By

Published : Feb 4, 2020, 7:55 AM IST

திருப்பூர் மாவட்டச் செய்திகள்  கொரோனாவிற்கு மருந்து  tiruppur district news
கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க முயற்சித்த 9ஆம் வகுப்பு மாணவன்

திருப்பூர் செரிப் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், தங்கம் தம்பதியின் மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

இதுகுறித்து பேசிய மாணவர் இசக்கிராஜ், 'கடந்த சில நாள்களாக செய்திகளில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழப்பதை அறிந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என எண்ணி எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பாப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அறைத்து சாறு தயாரித்தேன்.

கொரோனா வைரஸுக்கு மருந்து தயாரித்த மாணவர்

இந்தச்சாறுடன் சஞ்சீவ் வேர் மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். இதன்பின்னர் அந்த மூலிகையை மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என ஆட்சியரிடம் தெரிவிக்க வந்தேன்' என்றார். இதனையடுத்து மாணவர் இசக்கிராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.

இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஹோட்டலை போலியாக விற்க முயற்சி - மூவர் கைது

திருப்பூர் செரிப் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், தங்கம் தம்பதியின் மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

இதுகுறித்து பேசிய மாணவர் இசக்கிராஜ், 'கடந்த சில நாள்களாக செய்திகளில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழப்பதை அறிந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என எண்ணி எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பாப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அறைத்து சாறு தயாரித்தேன்.

கொரோனா வைரஸுக்கு மருந்து தயாரித்த மாணவர்

இந்தச்சாறுடன் சஞ்சீவ் வேர் மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். இதன்பின்னர் அந்த மூலிகையை மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என ஆட்சியரிடம் தெரிவிக்க வந்தேன்' என்றார். இதனையடுத்து மாணவர் இசக்கிராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.

இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஹோட்டலை போலியாக விற்க முயற்சி - மூவர் கைது

Intro:திருப்பூரில், 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.Body:திருப்பூர், செரிப் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் அவரது மனைவி தங்கம். இவர்களது மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மருந்து பாட்டலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இதுகுறித்து சிறுவன் கூறும்போது , கடந்த சில நாட்களாக நான் செய்திகளில் பார்க்கும்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பல பொதுமக்கள் உயிரிழப்பதை அறிந்தேன். இதுகுறித்து நான் மிகுந்த வேதனைப்பட்டேன். ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பின்னர், எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிளை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அறைத்து சாறு தயார் செய்தேன். இதுகுறித்து எனது பள்ளி முதல்வரிடம் தெரிவித்தேன். பின்னர், அவர் எனக்கு விடுமுறை அனுமதி அளித்த பின்னர் கலெக்டர் அலுவலகம் வந்தேன். மேலும், இதனுடன் சஞ்சீவ் வேறு மற்றும் வெட்டி வேறை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். மேலும், பின்னர், இதை அரசு மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என கலெக்டரிடம் தெரிவிக்க கொண்டு வந்தேன் என்றார். இதையடுத்து, தனது கண்டுபிடிப்பு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக அளித்து சென்றார். மேலும், நாளை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலிகை மருந்தை ஒப்படைக்க போவதாக தெரிவித்தார்.

பேட்டி : இசக்கி ராஜ் , மாணவன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.