ETV Bharat / state

குடிபோதையில் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

author img

By

Published : Nov 11, 2020, 1:42 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் குடிபோதையில் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கூலி தொழிலாளி உயிரிழப்பு
கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் (34). இவர் நேற்று (நவ.10) இரவு மது அருந்திவிட்டு மூக்கனூர் பகுதியில் உடல் நலம் சரியில்லாத தனது மாமியாரை பார்க்க சென்றார். அப்போது மாமியாரின் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

நீச்சல் தெரியாத அழகேசன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த மாமியார் நாட்றம்பள்ளி தீயணைப்புபடைக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை வீரர்கள், காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: பழைய வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் (34). இவர் நேற்று (நவ.10) இரவு மது அருந்திவிட்டு மூக்கனூர் பகுதியில் உடல் நலம் சரியில்லாத தனது மாமியாரை பார்க்க சென்றார். அப்போது மாமியாரின் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

நீச்சல் தெரியாத அழகேசன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த மாமியார் நாட்றம்பள்ளி தீயணைப்புபடைக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை வீரர்கள், காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: பழைய வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.