ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு: குத்தாட்டம் போட்டு வரவேற்ற வாணியம்பாடி வட்டாட்சியர்!

author img

By

Published : Jul 26, 2022, 9:41 PM IST

திருப்பத்தூரில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, வாணியம்பாடி வட்டாட்சியர் குத்தாட்டம் போட்டு வரவேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு

திருப்பத்தூர்: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவதையொட்டி அதற்கான விழிப்புணர்வு ஜோதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்ததையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஒலிம்பியாட் ஜோதி வந்தபோது வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத், தனது சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு: குத்தாட்டம் போட்டு வரவேற்ற வாணியம்பாடி வட்டாட்சியர்!

அதேபோல் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் பல அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் பயணம்

திருப்பத்தூர்: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவதையொட்டி அதற்கான விழிப்புணர்வு ஜோதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்ததையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஒலிம்பியாட் ஜோதி வந்தபோது வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத், தனது சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு: குத்தாட்டம் போட்டு வரவேற்ற வாணியம்பாடி வட்டாட்சியர்!

அதேபோல் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் பல அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.