ETV Bharat / state

கனமழைக்கு 6 வயது குழந்தை உயிரிழப்பு! - நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து கூறை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை உயிரிழந்தது.

crime
crime
author img

By

Published : May 10, 2022, 6:25 PM IST

Updated : May 10, 2022, 7:51 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் கிருஷ்ணாபாலு(35), சத்யா (27) தம்பதியினர் வசித்துவருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு மகள் தேவிகா (6) மற்றும் கவின் (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள், நான்கு பேரும் நேற்றிரவு வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபொழுது இரவு பெய்த கனமழையின் காரணமாக 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது.

இதில் கவினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தேவிகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் கிருஷ்ணாபாலு(35), சத்யா (27) தம்பதியினர் வசித்துவருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு மகள் தேவிகா (6) மற்றும் கவின் (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள், நான்கு பேரும் நேற்றிரவு வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபொழுது இரவு பெய்த கனமழையின் காரணமாக 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது.

இதில் கவினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தேவிகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை

Last Updated : May 10, 2022, 7:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.