ETV Bharat / state

திருநங்கைகள் தினம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாட்டம்

author img

By

Published : Apr 15, 2021, 10:10 PM IST

திருப்பத்தூர்: தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தேசிய திருநங்கைகள்  தினம்
தேசிய திருநங்கைகள் தினம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி 2011ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகள் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வருடந்தோறும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் தங்களுடைய தேசிய தினத்தை மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.15) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள திருநங்கைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட சந்தன பூக்கள் நலச்சங்க குழுவின் தலைவி கற்பகம், செயலாளர் மோனிகா, பொருளாளர் பல்லவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி 2011ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகள் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வருடந்தோறும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் தங்களுடைய தேசிய தினத்தை மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.15) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள திருநங்கைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட சந்தன பூக்கள் நலச்சங்க குழுவின் தலைவி கற்பகம், செயலாளர் மோனிகா, பொருளாளர் பல்லவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.