ETV Bharat / state

இளம்பெண் மரணத்தில் மர்மம் நீடிப்பு! - இளம்பெண் மரணத்தில் மர்மம் நீடிப்பு

திருப்பத்தூர்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. இதற்கிடையில், அவர் கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

The mystery of teenage women death  mystery death  Tirupattur women death  இளம்பெண் மரணத்தில் மர்மம் நீடிப்பு  திருப்பத்தூரில் இளம்பெண் மரணம்
The mystery of teenage women death mystery death Tirupattur women death இளம்பெண் மரணத்தில் மர்மம் நீடிப்பு திருப்பத்தூரில் இளம்பெண் மரணம்
author img

By

Published : Jun 1, 2020, 12:00 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அக்ராஹரம் பூஞ்சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (29). எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (19) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக கிருஷ்ணமூர்த்தி வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவை, கிருஷ்ணமூர்த்தி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

இந்த விஷயத்தை திவ்யா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து திவ்யாவின் பெற்றோர் வரதட்சணை பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் திவ்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திவ்யாவின் கணவர் கிருஷ்ணமூர்த்திதான் அவரைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகவும் திவ்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:காவலர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அக்ராஹரம் பூஞ்சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (29). எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (19) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக கிருஷ்ணமூர்த்தி வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவை, கிருஷ்ணமூர்த்தி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

இந்த விஷயத்தை திவ்யா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து திவ்யாவின் பெற்றோர் வரதட்சணை பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் திவ்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திவ்யாவின் கணவர் கிருஷ்ணமூர்த்திதான் அவரைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகவும் திவ்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:காவலர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.