திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஆண்டிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (50). இவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பிரச்சினை காரணமாக தனது சொந்த ஊரான ஆண்டிவட்டத்திற்கு வந்து தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப். 21) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த, அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?