ETV Bharat / state

மஅனுமதிக்க மறுக்கும் கிராமம்...!

author img

By

Published : Apr 10, 2020, 11:05 AM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தண்ணீருக்காக இரண்டு கிமீ தூரம் வரும் மக்களை, கரோனா அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் அனுமதிக்க மறுக்கின்றனர்.

people-struggle-water
people-struggle-water

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் கிராமப் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு இரண்டு மாதங்களாக தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் கடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கவுண்டப்பனூர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி ஊராட்சி செயலாளர் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் பைப் போடுவதற்கான பணி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் முறையாக வந்து கொண்டிருந்த பைப்பிற்கு பதிலாக வேறொரு பைப் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆங்காங்கே குழி தோண்டியபோது, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்துள்ள பைப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அப்பகுதி குடிநீர் பைப்புகளை சரிசெய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குடி தண்ணீர் தேடி வருவோரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்
குடி தண்ணீர் தேடி வருவோரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்

இதுகுறித்து கூறிய கிராமத்தினர், "நாங்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி நாங்கள் தண்ணீர் எடுக்க பக்கத்து கிராமத்திற்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்கள் கரோனா வைரஸ் பரவிவிடும் என்று ஊர் எல்லைப் பகுதியில் தடைகள் அமைத்து உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தினர் மட்டுமின்றி, ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் போதிய குடி தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை முதல் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை - மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் கிராமப் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு இரண்டு மாதங்களாக தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் கடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கவுண்டப்பனூர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி ஊராட்சி செயலாளர் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் பைப் போடுவதற்கான பணி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் முறையாக வந்து கொண்டிருந்த பைப்பிற்கு பதிலாக வேறொரு பைப் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆங்காங்கே குழி தோண்டியபோது, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்துள்ள பைப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அப்பகுதி குடிநீர் பைப்புகளை சரிசெய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குடி தண்ணீர் தேடி வருவோரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்
குடி தண்ணீர் தேடி வருவோரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்

இதுகுறித்து கூறிய கிராமத்தினர், "நாங்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி நாங்கள் தண்ணீர் எடுக்க பக்கத்து கிராமத்திற்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்கள் கரோனா வைரஸ் பரவிவிடும் என்று ஊர் எல்லைப் பகுதியில் தடைகள் அமைத்து உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தினர் மட்டுமின்றி, ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் போதிய குடி தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை முதல் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை - மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.