ETV Bharat / state

மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள் - வனத்துறை விசாரணை

author img

By

Published : Mar 4, 2022, 9:44 AM IST

ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இறந்து கிடந்த இரண்டு ஆண் மயில்களை மீட்ட வன அலுவலர்கள், மயில் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்
மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி கிராமத்திலுள்ள துருகம் காப்புக்காடு அடிவாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ் என்பவரின் மாந்தோப்பு அமைந்துள்ளது. நேற்று (மார்ச் 03) காப்புக்காட்டு பகுதியில் இருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட மயில்கள் இரை தேடி வந்துள்ளன.

அப்போது, திடீரென இரண்டு ஆண் மயில்கள் கோவிந்தராஜின் மாந்தோப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற சில பெண்கள் மயில்கள் இறந்ததைக் கண்டு உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த இரு மயில்களை மீட்டு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தொடர்ந்து, மயில்கள் இறப்பு குறித்து வன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவு இல்லாமல் தவிக்கும் காட்டு யானை!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி கிராமத்திலுள்ள துருகம் காப்புக்காடு அடிவாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ் என்பவரின் மாந்தோப்பு அமைந்துள்ளது. நேற்று (மார்ச் 03) காப்புக்காட்டு பகுதியில் இருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட மயில்கள் இரை தேடி வந்துள்ளன.

அப்போது, திடீரென இரண்டு ஆண் மயில்கள் கோவிந்தராஜின் மாந்தோப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற சில பெண்கள் மயில்கள் இறந்ததைக் கண்டு உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த இரு மயில்களை மீட்டு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தொடர்ந்து, மயில்கள் இறப்பு குறித்து வன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவு இல்லாமல் தவிக்கும் காட்டு யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.