ETV Bharat / state

நாட்றம்பள்ளி கல்லூரி மாணவி கொலை வழக்கு; தப்பி ஓடிய தாய்மாமன் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 2:08 PM IST

College girl murder: நாட்றம்பள்ளி அருகே பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

natrampalli-college-student-murder-case-aquest-arrest
நாட்றம்பள்ளி கல்லூரி மாணவி கொலை குற்றவாளி கைது

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா (18). இவர் பருகூர் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், ஜீவிதா அம்மா ஜெயப்பிரதாவின் தம்பி முறையான சரண்ராஜ் (35) என்பவர், திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஷோ ரூமில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ஜீவிதாவும், சரண்ராஜ் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்ராஜ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால், ஜீவிதாவின் தாயார் சரண்ராஜ்-க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, ஜீவிதா சரண்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார்.‌ இந்நிலையில் நேற்று (அக்.14) ஜீவிதாவின் பெற்றோர் வேலைக்குச் சென்று உள்ளனர். மேலும், கல்லூரி விடுமுறை என்பதால், ஜீவிதா தனியாக வீட்டினுள் இருந்துள்ளார்.

இதனை அறிந்த சரண்ராஜ், ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து உள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தப்பி ஓடிய சரண்ராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர் ஜான் உத்தரவிட்டார். இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் தனிப்படை காவல் துறையினர் சரண்ராஜை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டிருந்த சரண்ராஜை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், வெலக்கல்நத்தம் விரைந்த காவல் துறையினர் சரண்ராஜை கைது செய்தனர். பின்னர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் திருடிய நபரை அடித்து கொலை செய்து உடலை பாலத்துக்கு அடியில் வீசிய மூவர் கைது!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா (18). இவர் பருகூர் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், ஜீவிதா அம்மா ஜெயப்பிரதாவின் தம்பி முறையான சரண்ராஜ் (35) என்பவர், திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஷோ ரூமில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ஜீவிதாவும், சரண்ராஜ் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்ராஜ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால், ஜீவிதாவின் தாயார் சரண்ராஜ்-க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, ஜீவிதா சரண்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார்.‌ இந்நிலையில் நேற்று (அக்.14) ஜீவிதாவின் பெற்றோர் வேலைக்குச் சென்று உள்ளனர். மேலும், கல்லூரி விடுமுறை என்பதால், ஜீவிதா தனியாக வீட்டினுள் இருந்துள்ளார்.

இதனை அறிந்த சரண்ராஜ், ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து உள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தப்பி ஓடிய சரண்ராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர் ஜான் உத்தரவிட்டார். இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் தனிப்படை காவல் துறையினர் சரண்ராஜை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டிருந்த சரண்ராஜை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், வெலக்கல்நத்தம் விரைந்த காவல் துறையினர் சரண்ராஜை கைது செய்தனர். பின்னர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் திருடிய நபரை அடித்து கொலை செய்து உடலை பாலத்துக்கு அடியில் வீசிய மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.