ETV Bharat / state

வனவிலங்கு வேட்டைக்காரர் கைது

author img

By

Published : May 11, 2020, 10:36 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வனவிலங்கு வேட்டைகாரன் கைது
வனவிலங்கு வேட்டைகாரன் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் காப்பு காட்டுப்பகுதிகளில் வன அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அச்சமயம் சான்றோர்குப்பம் தெற்கு வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நாயக்கனேரி, மேலூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்

அதன்பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ந்து அப்பகுதியில் வனவிலங்குகளை அவர் வேட்டையாடி வருவது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, பின்னர் வனத்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விலங்குகளை வேட்டையாட சென்ற நான்கு பேர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் காப்பு காட்டுப்பகுதிகளில் வன அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அச்சமயம் சான்றோர்குப்பம் தெற்கு வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நாயக்கனேரி, மேலூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்

அதன்பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ந்து அப்பகுதியில் வனவிலங்குகளை அவர் வேட்டையாடி வருவது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, பின்னர் வனத்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விலங்குகளை வேட்டையாட சென்ற நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.