ETV Bharat / state

மகன் இறப்பில் சந்தேகம்: மருமகளைக் கைது செய்யக்கோரி போராடிய தந்தை

author img

By

Published : Feb 8, 2022, 10:31 PM IST

திருப்பத்தூர் அருகே மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, மருமகளை கைது செய்யக்கோரி உயிரிழந்தவரின் தந்தை மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மருமகளை கைது செய்யக்கோரி
மருமகளை கைது செய்யக்கோரி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார்(29). அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து வந்துள்ளார்.

இவருக்கும் குரும்பேரி கிராமத்தைச்சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகள் விசித்ரா(23) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மோனிஷ்(4) என்கிற மகனும், தன்ஷிகா(2) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் விசித்ரா, தனது அத்தை மகன் சீனிவாசன்(24) என்பவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவரும், நவீன் குமாரின் தந்தைக்கு போனில் அழைத்து, நவீன்குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் எனக் கூறியிருக்கின்றனர்.

மருமகளை கைது செய்யக்கோரி
மருமகளை கைது செய்யக்கோரி போராட்டம்

அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது, நவீன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நவீன் குமாரை அடக்கம் செய்தனர்.

மருமகள் மீது உண்டான சந்தேகம்

இதனால் முருகன், தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின்பேரில் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது மருமகள் விசித்ரா அதிக நேரம் சீனிவாசனுடன் பேசியுள்ளது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து மருமகளான விசித்ரா தான், தனது மகன் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி, திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், இதுவரை காவல் துறையினர் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், புதைத்த நவீன் குமாரின் உடலை திரும்பவும் தோண்டி எடுத்து மறுகூராய்வுசெய்ய வேண்டும் எனக்கூறி,உயிரிழந்த நவீன்குமாரின் தந்தை முருகன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த நவீன்குமாரின் பெற்றோரிடம் மறுஉடற்கூராய்வுசெய்யப்படும் என்று உறுதி கூறியதால், அவ்விடத்தில் கூடிய நவீன்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையு படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார்(29). அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து வந்துள்ளார்.

இவருக்கும் குரும்பேரி கிராமத்தைச்சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகள் விசித்ரா(23) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மோனிஷ்(4) என்கிற மகனும், தன்ஷிகா(2) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் விசித்ரா, தனது அத்தை மகன் சீனிவாசன்(24) என்பவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவரும், நவீன் குமாரின் தந்தைக்கு போனில் அழைத்து, நவீன்குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் எனக் கூறியிருக்கின்றனர்.

மருமகளை கைது செய்யக்கோரி
மருமகளை கைது செய்யக்கோரி போராட்டம்

அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது, நவீன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நவீன் குமாரை அடக்கம் செய்தனர்.

மருமகள் மீது உண்டான சந்தேகம்

இதனால் முருகன், தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின்பேரில் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது மருமகள் விசித்ரா அதிக நேரம் சீனிவாசனுடன் பேசியுள்ளது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து மருமகளான விசித்ரா தான், தனது மகன் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி, திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், இதுவரை காவல் துறையினர் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், புதைத்த நவீன் குமாரின் உடலை திரும்பவும் தோண்டி எடுத்து மறுகூராய்வுசெய்ய வேண்டும் எனக்கூறி,உயிரிழந்த நவீன்குமாரின் தந்தை முருகன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த நவீன்குமாரின் பெற்றோரிடம் மறுஉடற்கூராய்வுசெய்யப்படும் என்று உறுதி கூறியதால், அவ்விடத்தில் கூடிய நவீன்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையு படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.