ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 28, 2020, 2:46 AM IST

திருப்பத்தூர்: கோனாபட்டு பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டதில், அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

accident
accident

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர், அரசு பேருந்து ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி (40) என்பவர் தனியார் கல்லூரி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரமேஷ், திருப்பதி இருவரும் இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டைக்கு சென்றுவிட்டு, திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோனாபட்டு அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பதிக்கு கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர், அரசு பேருந்து ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி (40) என்பவர் தனியார் கல்லூரி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரமேஷ், திருப்பதி இருவரும் இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டைக்கு சென்றுவிட்டு, திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோனாபட்டு அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பதிக்கு கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.