ETV Bharat / state

டேங்கர் லாரியில் கார் மோதி விபத்து - உயிர் தப்பிய தம்பதி

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருந்த தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர்.

Car collision with tanker truck - Couple survived
Car collision with tanker truck - Couple survived
author img

By

Published : Aug 11, 2020, 9:41 AM IST

கேரள மாநிலத்தை சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவியுடன் வேலூர் காட்பாடி பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கேரளாவில் இருந்து கார் மூலமாக வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை டான்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் மனோவும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். இந்நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் காட்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரில் பாதுகாப்பு பலூன் வசதி பொருத்தப்பட்டிருந்ததால் கணவன், மனைவி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவியுடன் வேலூர் காட்பாடி பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கேரளாவில் இருந்து கார் மூலமாக வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை டான்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் மனோவும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். இந்நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் காட்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரில் பாதுகாப்பு பலூன் வசதி பொருத்தப்பட்டிருந்ததால் கணவன், மனைவி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.