ETV Bharat / state

8 மாதங்களுக்கு பிறகு அமிர்தி வன உயிரியல் பூங்கா திறப்பு! - அமிர்தி வன உயிரியல் பூங்கா

திருப்பத்தூர்: 8 மாதங்களுக்கு பிறகு அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டது. இருப்பினும் அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

zoo
zoo
author img

By

Published : Nov 12, 2020, 5:50 PM IST

வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லை மலைப்பகுதியில் உள்ள அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொழுது போக்கு பூங்காக்கள், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ள அமிர்தி பூங்காவும் எட்டு மாதங்களுக்குப்பிறகு இன்று திறக்கப்பட்டது.

பூங்கா நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. அமிர்தி பூங்கா அருகே உள்ள அருவியில் தண்ணீர் கொட்டினாலும், அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லை மலைப்பகுதியில் உள்ள அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொழுது போக்கு பூங்காக்கள், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ள அமிர்தி பூங்காவும் எட்டு மாதங்களுக்குப்பிறகு இன்று திறக்கப்பட்டது.

பூங்கா நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. அமிர்தி பூங்கா அருகே உள்ள அருவியில் தண்ணீர் கொட்டினாலும், அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.