ETV Bharat / state

ஜன்னல் கதவை உடைத்து 18 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை!

author img

By

Published : Aug 31, 2020, 3:57 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து 18 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், எல்.இ.டி. தொலைக்காட்சி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

theft
theft

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகில் வசித்துவருபவர் அம்சவேணி (64). கணவனை இழந்த இவர் தனது தாயுடன் மளிகைக் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) இரவு இவரது வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பீரோவில் பூட்டிவைக்கப்பட்டிருந்த 18 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வீட்டில் இருந்த எல்.இ.டி. தொலைக்காட்சி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் இன்று (ஆகஸ்ட் 31) காலை அம்சவேணி மளிகைக் கடையை திறக்க அறையினுள் நுழைந்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பணம், நகையை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகில் வசித்துவருபவர் அம்சவேணி (64). கணவனை இழந்த இவர் தனது தாயுடன் மளிகைக் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) இரவு இவரது வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பீரோவில் பூட்டிவைக்கப்பட்டிருந்த 18 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வீட்டில் இருந்த எல்.இ.டி. தொலைக்காட்சி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் இன்று (ஆகஸ்ட் 31) காலை அம்சவேணி மளிகைக் கடையை திறக்க அறையினுள் நுழைந்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பணம், நகையை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.