ETV Bharat / state

இந்தியா 75 - சுதந்திரப் போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு

author img

By

Published : Dec 18, 2021, 6:03 AM IST

Updated : Dec 19, 2021, 7:15 AM IST

இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் வாஞ்சிநாதனின் பங்கு மிகப் பெரியது. 25 வயதே நிரம்பிய வாஞ்சிநாதனின் போராட்டப் பாதையை இந்நாளில் நினைவுகூர்வோம்.

வாஞ்சி மணியாச்சி
வாஞ்சி மணியாச்சி

1911ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியை இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொடைக்கானலில் படிக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்ப்பதற்காக போட் மெயில் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், மனைவி மேரியுடன் அமர்ந்திருக்கிறார் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். கலெக்டரின் காவலாளி நீர் பிடிக்கச் சென்றிருந்த சமயத்தில், முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிய பயணி ஒருவர், ஆஷை அவரது மனைவியின் கண்முன்னே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தப்பித்து ஓடிய அந்நபர் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரவாதப் போக்கின் புரட்சிக்குப் பலியான முதல் ஆங்கிலேயர் கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கோர்ட் ஆஷ். அதைச் செய்து முடித்தவர் இருபத்து ஐந்து வயதே நிரம்பிய வாஞ்சிநாதன்.

போராட்டக்காரர்களின் கணக்கு

இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், உலகில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஜனத்தொகையை விட இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். போராட்டக்காரர்களுக்கு ஒரு கணக்கு இருந்தது. இந்தியாவை அடிமைப்படுத்தியிருக்கும் ஆங்கிலேயர்களை ஒரு இந்தியன் சுட்டுக் கொன்றால் போதும்; இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

அந்த அடிப்படையில்தான், அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்துகொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாக இருந்த, நெல்லை எழுச்சியின்போது கொடுமையாக நடந்துகொண்டு வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியை அழிந்துபோகச் செய்த கலெக்டர் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுத்தனர்.

வாஞ்சிநாதன் தேர்ந்தெடுத்தப் பாதை

செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன், பள்ளிப்படிப்பை செங்கோட்டையிலும், கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்திலும் முடித்து, வன இலாக்காவில் பணிபுரிந்தார். அப்போது தீவிரமடைந்துவந்த இந்திய சுதந்திர வேட்கையின்பால் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன், தனது போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்தது ஆயுத தாரிகளின் பாதை. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பங்குகொள்ள, அன்றைய பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரியில் செயல்பட்டுவந்த சாவர்க்காரின் அபிநவ் பாரத் அமைப்பின் கிளை அமைப்பான வி.வி.எஸ். ஐயரின் பாரத மாதா அமைப்பின் மூலம் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

ஆஷின் அடக்குமுறை

பாளையக்காரர்கள் காலத்திலிருந்தே விடுதலைக் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்திருந்தது அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி. தூத்துக்குடி தாலுகாவின் துணை கலெக்டராக இருந்து, பதவி உயர்வு பெற்றிருந்த ஆஷ், திருநெல்வேலியின் விடுதலைக் குரலை அடக்குவதில் தீவிரம் காட்டினார். அதில் ஒன்று வ.உ.சி.யின் சுதேசி கப்பல் நிறுவனத்தை நிர்மூலமாக்கி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா தண்டனை பெற காரணமாய் இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன், ஆஷைக் கொன்றார்.

சுதந்திரப் போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு

வாஞ்சியின் போராட்டக் காலம்

வாஞ்சிநாதன் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தது கிடையாது. அவர் அதிகமாக பொதுப்பணிகளில்தான் ஈடுபட்டார். முக்கியமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். நீலகண்ட பிரம்மச்சாரி என்பவரது தொடர்பு கிடைத்தபின், அவர்கள் அனைவரும் பாரதமாதா என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

அதில் ரகசிய கூட்டங்களை நடத்தி, இறுதியாக 1908 மார்ச் 9ஆம் தேதி விபின் சந்திரபாலரின் விடுதலையையும், சுயராஜ்ய தினத்தையும் கொண்டாட முடிவெடுத்து ஒரு சபதம் எடுத்துக் கொள்கின்றனர். 1907 லிருந்து 1911-க்குள் வாஞ்சியின் போராட்டக் காலம் முடிந்துவிடுகிறது

வாஞ்சியின் சனாதன தர்மம்

சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மடைமாற்றிய வாஞ்சிநாதனின் செயல் வரலாற்றின் பக்கங்களில் போதிய வெளிச்சம் பெறவில்லை. அதற்குக் காரணம் வாஞ்சியின் கடிதம் ஒன்று. அவர் இறந்ததும் அவரது சட்டைப் பையில் இருந்து எடுக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் "ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். ஆங்கிலேயர்களைத் துரத்தியடித்து தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.

கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அவர்களில் இளையவனான நான் இச்செய்கை செய்தேன்" என நீண்டது வரிகள்.

வாஞ்சிநாதன் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவரது குடும்பத்தினர் மிகுந்த தொல்லைக்குள்படுத்தப்பட்டனர். வாஞ்சியின் அப்பா ரகுபதியை அழைத்துச் சென்று, அவரை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். முதலில் சுட்டது யார் என்றே தெரியவில்லை. பின்னர் தாத்தாவின் மூலம் வாஞ்சிநாதன் என உறுதிசெய்திருக்கிறார்கள்.

வாஞ்சி மணியாச்சி

வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன் எடுத்த முயற்சியால், வாஞ்சிநாதன் தன்னுயிர் நீத்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 'வாஞ்சி மணியாச்சி' எனப் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்குச் சிலையை நிறுவி, மணிமண்டபமும் அமைத்தது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தில் போரட்டத்தின் முக்கியப் பங்காற்றிய வாஞ்சிநாதனின் வரலாற்றையும் நாம் நினைவுகூருவோம்.

இதையும் படிங்க: வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...

1911ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியை இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொடைக்கானலில் படிக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்ப்பதற்காக போட் மெயில் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், மனைவி மேரியுடன் அமர்ந்திருக்கிறார் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். கலெக்டரின் காவலாளி நீர் பிடிக்கச் சென்றிருந்த சமயத்தில், முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிய பயணி ஒருவர், ஆஷை அவரது மனைவியின் கண்முன்னே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தப்பித்து ஓடிய அந்நபர் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரவாதப் போக்கின் புரட்சிக்குப் பலியான முதல் ஆங்கிலேயர் கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கோர்ட் ஆஷ். அதைச் செய்து முடித்தவர் இருபத்து ஐந்து வயதே நிரம்பிய வாஞ்சிநாதன்.

போராட்டக்காரர்களின் கணக்கு

இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், உலகில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஜனத்தொகையை விட இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். போராட்டக்காரர்களுக்கு ஒரு கணக்கு இருந்தது. இந்தியாவை அடிமைப்படுத்தியிருக்கும் ஆங்கிலேயர்களை ஒரு இந்தியன் சுட்டுக் கொன்றால் போதும்; இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

அந்த அடிப்படையில்தான், அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்துகொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாக இருந்த, நெல்லை எழுச்சியின்போது கொடுமையாக நடந்துகொண்டு வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியை அழிந்துபோகச் செய்த கலெக்டர் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுத்தனர்.

வாஞ்சிநாதன் தேர்ந்தெடுத்தப் பாதை

செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன், பள்ளிப்படிப்பை செங்கோட்டையிலும், கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்திலும் முடித்து, வன இலாக்காவில் பணிபுரிந்தார். அப்போது தீவிரமடைந்துவந்த இந்திய சுதந்திர வேட்கையின்பால் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன், தனது போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்தது ஆயுத தாரிகளின் பாதை. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பங்குகொள்ள, அன்றைய பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரியில் செயல்பட்டுவந்த சாவர்க்காரின் அபிநவ் பாரத் அமைப்பின் கிளை அமைப்பான வி.வி.எஸ். ஐயரின் பாரத மாதா அமைப்பின் மூலம் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

ஆஷின் அடக்குமுறை

பாளையக்காரர்கள் காலத்திலிருந்தே விடுதலைக் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்திருந்தது அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி. தூத்துக்குடி தாலுகாவின் துணை கலெக்டராக இருந்து, பதவி உயர்வு பெற்றிருந்த ஆஷ், திருநெல்வேலியின் விடுதலைக் குரலை அடக்குவதில் தீவிரம் காட்டினார். அதில் ஒன்று வ.உ.சி.யின் சுதேசி கப்பல் நிறுவனத்தை நிர்மூலமாக்கி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா தண்டனை பெற காரணமாய் இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன், ஆஷைக் கொன்றார்.

சுதந்திரப் போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு

வாஞ்சியின் போராட்டக் காலம்

வாஞ்சிநாதன் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தது கிடையாது. அவர் அதிகமாக பொதுப்பணிகளில்தான் ஈடுபட்டார். முக்கியமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். நீலகண்ட பிரம்மச்சாரி என்பவரது தொடர்பு கிடைத்தபின், அவர்கள் அனைவரும் பாரதமாதா என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

அதில் ரகசிய கூட்டங்களை நடத்தி, இறுதியாக 1908 மார்ச் 9ஆம் தேதி விபின் சந்திரபாலரின் விடுதலையையும், சுயராஜ்ய தினத்தையும் கொண்டாட முடிவெடுத்து ஒரு சபதம் எடுத்துக் கொள்கின்றனர். 1907 லிருந்து 1911-க்குள் வாஞ்சியின் போராட்டக் காலம் முடிந்துவிடுகிறது

வாஞ்சியின் சனாதன தர்மம்

சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மடைமாற்றிய வாஞ்சிநாதனின் செயல் வரலாற்றின் பக்கங்களில் போதிய வெளிச்சம் பெறவில்லை. அதற்குக் காரணம் வாஞ்சியின் கடிதம் ஒன்று. அவர் இறந்ததும் அவரது சட்டைப் பையில் இருந்து எடுக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் "ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். ஆங்கிலேயர்களைத் துரத்தியடித்து தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.

கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அவர்களில் இளையவனான நான் இச்செய்கை செய்தேன்" என நீண்டது வரிகள்.

வாஞ்சிநாதன் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவரது குடும்பத்தினர் மிகுந்த தொல்லைக்குள்படுத்தப்பட்டனர். வாஞ்சியின் அப்பா ரகுபதியை அழைத்துச் சென்று, அவரை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். முதலில் சுட்டது யார் என்றே தெரியவில்லை. பின்னர் தாத்தாவின் மூலம் வாஞ்சிநாதன் என உறுதிசெய்திருக்கிறார்கள்.

வாஞ்சி மணியாச்சி

வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன் எடுத்த முயற்சியால், வாஞ்சிநாதன் தன்னுயிர் நீத்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 'வாஞ்சி மணியாச்சி' எனப் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்குச் சிலையை நிறுவி, மணிமண்டபமும் அமைத்தது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தில் போரட்டத்தின் முக்கியப் பங்காற்றிய வாஞ்சிநாதனின் வரலாற்றையும் நாம் நினைவுகூருவோம்.

இதையும் படிங்க: வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...

Last Updated : Dec 19, 2021, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.