ETV Bharat / state

'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகியுள்ளன' - வானதி சீனிவாசன் விமர்சனம்

author img

By

Published : Sep 1, 2022, 10:19 PM IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “ வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் ஏன் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்கின்ற விதத்தில் ஆட்சி நடத்துவோம் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்தார்.

ஆனால், தற்போதைய சூழலில் வாக்களித்தவர்கள் கூட ஏன் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணுகின்ற சூழலில் தான் தமிழ்நாட்டினுடைய அரசியல் சூழல் இருக்கிறது. போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா என்பது எல்லா மாவட்டங்களிலும், கல்லூரி, பள்ளி, மாணவர்கள் கையில் அதிகமாக புழங்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறது.

வெறுமனே போதைப்பொருளுக்கு எதிராக அவர்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதி மற்றும் உறுதிமொழி என்பது போதாது. இதனை மிக மிகக் கடுமையான நடவடிக்கையின் வாயிலாக தான் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மத்தியில் இருக்கக்கூடிய அமைப்புகளோடு கூட மாநிலத்தினுடைய மாநில முதலமைச்சர் கலந்து பேசி அண்டை மாநிலங்கள் வழியாக வரக்கூடிய இந்த போதைப்பொருளுக்கு தகுந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

மேலும், ’தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல் துறை செயலிழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதேபோல அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது’ என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல.. திருப்பி அடிப்பேன்.. அண்ணாமலை

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “ வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் ஏன் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்கின்ற விதத்தில் ஆட்சி நடத்துவோம் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்தார்.

ஆனால், தற்போதைய சூழலில் வாக்களித்தவர்கள் கூட ஏன் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணுகின்ற சூழலில் தான் தமிழ்நாட்டினுடைய அரசியல் சூழல் இருக்கிறது. போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா என்பது எல்லா மாவட்டங்களிலும், கல்லூரி, பள்ளி, மாணவர்கள் கையில் அதிகமாக புழங்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறது.

வெறுமனே போதைப்பொருளுக்கு எதிராக அவர்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதி மற்றும் உறுதிமொழி என்பது போதாது. இதனை மிக மிகக் கடுமையான நடவடிக்கையின் வாயிலாக தான் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மத்தியில் இருக்கக்கூடிய அமைப்புகளோடு கூட மாநிலத்தினுடைய மாநில முதலமைச்சர் கலந்து பேசி அண்டை மாநிலங்கள் வழியாக வரக்கூடிய இந்த போதைப்பொருளுக்கு தகுந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

மேலும், ’தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல் துறை செயலிழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதேபோல அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது’ என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல.. திருப்பி அடிப்பேன்.. அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.