ETV Bharat / state

மீனவர் கடலில் விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்!

author img

By

Published : Nov 13, 2019, 2:59 PM IST

தூத்துக்குடி: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது மாயமான மீனவரை விரைந்து கண்டுபிடித்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மீனவர் கடலில் விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்!

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம் ஷா (42). மீனவரான இவர் கடந்த 11ஆம் தேதி பைபர் படகில் சக மீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்றபொழுது காலில் வலை சிக்கிக்கொண்டதால் அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். இதைப்பார்த்த சக மீனவர்கள் இப்ராகிம்ஷாவைக் காப்பாற்ற முயன்றனர்.

மாயமான மீனவர்
மாயமான மீனவர்

ஆனால், நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இப்ராகிம்ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இது குறித்த தகவல் கடலோரக் காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலில் விழுந்து மாயமான இப்ராகிம்ஷாவை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 15 படகுகளிலும் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் மாயமான மீனவரை தேடிவருகின்றனர். மீனவர் கடலில் விழுந்து மாயமானதைத் தொடர்ந்து இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதையடுத்து மீனவர் சங்க நிர்வாகி முகமது கூறுகையில், "மீனவர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனக் கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீனவர் கடலில் விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்!

கடலில் மீனவர் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை என்பதை மிகவும் காலதாமதமாக வழங்கப்பட்டுவருகிறது. எனவே கடலில் இறந்த மீனவரின் உடல் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க...ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம் ஷா (42). மீனவரான இவர் கடந்த 11ஆம் தேதி பைபர் படகில் சக மீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்றபொழுது காலில் வலை சிக்கிக்கொண்டதால் அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். இதைப்பார்த்த சக மீனவர்கள் இப்ராகிம்ஷாவைக் காப்பாற்ற முயன்றனர்.

மாயமான மீனவர்
மாயமான மீனவர்

ஆனால், நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இப்ராகிம்ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இது குறித்த தகவல் கடலோரக் காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலில் விழுந்து மாயமான இப்ராகிம்ஷாவை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 15 படகுகளிலும் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் மாயமான மீனவரை தேடிவருகின்றனர். மீனவர் கடலில் விழுந்து மாயமானதைத் தொடர்ந்து இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதையடுத்து மீனவர் சங்க நிர்வாகி முகமது கூறுகையில், "மீனவர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனக் கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீனவர் கடலில் விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்!

கடலில் மீனவர் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை என்பதை மிகவும் காலதாமதமாக வழங்கப்பட்டுவருகிறது. எனவே கடலில் இறந்த மீனவரின் உடல் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க...ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

Intro:தூத்துக்குடியில் ஆழ்கடலில் மின்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் கடலில் விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம் ஷா (வயது 42) இவருக்கு திருமணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு சொந்தமான பைப்பர் படகில் சகமீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்ற பொழுது காலில் வலைசிக்கிக் கொண்டதால் அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். இதை பார்த்த சக மீனவர்கள் இப்ராஹிம்ஷாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இப்ராகிம்ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதுகுறித்த தகவல் கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலில் விழுந்து மாயமான இப்ராஹிம்ஷாவை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 15 படகுகளிலும் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் மாயமான மீனவரை தேடிவருகின்றனர்.
மீனவர் கடலில் விழுந்து மாயமானதை தொடர்ந்து இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுதொடர்பாக நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கடலில் 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் இப்ராஹீம் ஷா கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி கடலோர காவல்படையினரும், மீனவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர் தவறி விழுந்ததை தொடர்ந்து திரேஸ்புரத்தில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை. மாயமான மீனவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

இதையடுத்து மீனவர் சங்க நிர்வாகி முகமது கூறுகையில்
மீனவர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டு இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலில் மீனவர் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகை என்பதை மிகவும் காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே கடலில் இறந்த மீனவரின் உடல் கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.