ETV Bharat / state

சுருக்குமடி வலையில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடல் மீட்பு!

தூத்துக்குடி: சுருக்குமடி வலையில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று ஆழ்கடலில் இருந்து மீட்கப்பட்டது.

author img

By

Published : Jun 26, 2019, 1:02 PM IST

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). மீனவரான இவர் கடந்த 24ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் சக மீனவர்கள் முனியசாமி, முத்து, எட்ராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றார்.


அங்கு தாமஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கி உயிரிழந்தார். இதைப்பார்த்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை அறுத்தெறிந்துவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திஸ்டனுடன் வந்த சக மீனவர்கள் கடலோர காவல்படைக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய சந்திஸ்டனை கடந்த இரண்டு நாட்களாக, காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் சந்திஸ்டன் உடலை மீட்டு காவல்துறையினர் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). மீனவரான இவர் கடந்த 24ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் சக மீனவர்கள் முனியசாமி, முத்து, எட்ராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றார்.


அங்கு தாமஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கி உயிரிழந்தார். இதைப்பார்த்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை அறுத்தெறிந்துவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திஸ்டனுடன் வந்த சக மீனவர்கள் கடலோர காவல்படைக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய சந்திஸ்டனை கடந்த இரண்டு நாட்களாக, காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் சந்திஸ்டன் உடலை மீட்டு காவல்துறையினர் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி துறைமுகம்
Intro:சுருக்குமடி வலையில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடல் மீட்பு - உடலில் பிளாஸ்டிக் டியூப் சுற்றிய நிலையில் கடலில் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் பிணமாக மிதந்தார்Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன் வயது 25. சங்குக்குளி மீனவர். இவர் கடந்த 24-ந்தேதி காலை 6 மணி அளவில் சக மீனவர்கள் முனியசாமி, முத்து, எட்ராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ் கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றார். கடலில் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்திஸ்டன் சங்குக்குளித்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக தாமஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வந்தது.
விசைப் படகில் வந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி அப்பகுதியில் மீன் பிடித்தனர். இதில் எதிர்பாராதவிதமாக சுருக்குமடி வலைக்குள் சந்திஸ்டன் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்குக்குளி மீனவர்கள் சந்திஸ்டனை காப்பாற்றுவதற்காக கூக்குரலிட்டனர். மேலும் விசைப்படகின் சுருக்குமடி வலையை மேலே தூக்குமாறும் அவர்கள் சத்தமிட்டனர். இதை விசைப்படகு மீனவர்கள் பார்த்த சுருக்குமடி வலையை அறுத்தெறிந்துவிட்டு நடு கடலில் இருந்து கரை திரும்பினர். இந்நிலையில் சுருக்குமடி வலைக்குள் சிக்கிய சந்திஸ்டன் ஆழ்கடலுக்குள் மூழ்கினார். இது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கும், தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கும் மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலில் மூழ்கிய சங்குக்குளி மீனவர் சந்திஸ்டனை தேடும் பணியில் கடந்த 2 நாட்களாக 2 கடலோர காவல்படை மெரைன் படகுகள் மற்றும் 15 நாட்டுப்படகு மீனவர்கள் போலீசாருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையே, விசைப்படகு மீனவர் தாமஸ் உள்பட 8 பேரை தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கடலில் மூழ்கிய சங்குக்குளி மீனவர் சந்திஸ்டன் உடலை மீட்டு தரக்கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், திரேஸ்புரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலுக்குள் மூழ்கிய மீனவர் சந்திஸ்டன் உடலை தேடும் பணி 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் வள்ளங்களில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்திஸ்டன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நடுக்கடலில் சங்குக்குளிக்க மீனவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டியூப் உடலில் சுற்றிய நிலையில் சந்திஸ்டன் உடல் மிதப்பதை கண்டனர். இதையடுத்து, சந்திஸ்டனின் உடலை கைப்பற்றிய மீனவர்கள், மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றிய தகவல் போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரைக்கு கொண்டுவரப்பட்ட சந்திஸ்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிணமாக மீட்கப்பட்ட சந்திஸ்டனை கண்டு அவரது உறவினர்கள் கூறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.