ETV Bharat / state

நண்பரை வெட்டிக்கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By

Published : Sep 4, 2019, 11:36 PM IST

தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக நண்பரை குடிக்கவைத்து வெட்டிக்கொன்ற இருவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

tuticorin-district-court-gives-punishment-life-imprisonment-for-murder-case

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா(29). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்தி வெங்கடேஷ்(22), அந்தோணிராஜ்(29), மாரிமுத்து(24), தங்கராஜ்(24) மற்றும் சுடலைமணி(27) போன்றவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கும் ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள், கடந்த 07.06.2017 அன்று இரவு ராஜாவுக்கு அதிகமாக மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய ராஜாவை தூக்கிச்சென்று ஈராட்சி-கசவன்குன்று செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து அரிவாள் மற்றும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து ராஜாவின் தந்தை பாக்கியநாதன் புகார் அளித்ததன் பேரில் கொப்பம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சக்தி வெங்கடேஷ் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தக் கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - IIஇல் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் சக்தி வெங்கடேஷ், அந்தோணிராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும், மீதமுள்ள மூன்று பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா(29). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்தி வெங்கடேஷ்(22), அந்தோணிராஜ்(29), மாரிமுத்து(24), தங்கராஜ்(24) மற்றும் சுடலைமணி(27) போன்றவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கும் ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள், கடந்த 07.06.2017 அன்று இரவு ராஜாவுக்கு அதிகமாக மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய ராஜாவை தூக்கிச்சென்று ஈராட்சி-கசவன்குன்று செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து அரிவாள் மற்றும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து ராஜாவின் தந்தை பாக்கியநாதன் புகார் அளித்ததன் பேரில் கொப்பம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சக்தி வெங்கடேஷ் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தக் கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - IIஇல் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் சக்தி வெங்கடேஷ், அந்தோணிராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும், மீதமுள்ள மூன்று பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

Intro:நண்பரை வெட்டிக்கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்புBody:
தூத்துக்குடி

கோவில்பட்டி, சண்முகாசிகாமணிநகர், 5வது தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த சக்தி வெங்கடேஷ்(22), அந்தோணிராஜ்(29), மாரிமுத்து(24), தங்கராஜ்(24), மற்றும் சுடலைமணி(27) ஆகியோரும் நண்பர்கள்.

ராஜாவுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை பழிவாங்க நினைத்து கடந்த 07.06.2017 அன்று இரவு சக்தி வெங்கடேஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து ராஜாவை அதிகப்படியாக மது குடிக்க வைத்ததனர்.
பின்பு ஈராட்சி - கசவன்குன்று செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து ராஜாவை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து ராஜாவின் தந்தை பாக்கியநாதன் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி வெங்கடேஷ் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -IIல் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கவுதமன், குற்ற வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட சக்தி வெங்கடேஷ் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் கொலை வழக்கின் சம்பந்தப்பட்ட மாரிமுத்து, தங்கராஜ், சுடலைமணி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.