ETV Bharat / state

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் விரலி மஞ்சள் பறிமுதல்!

author img

By

Published : Dec 9, 2020, 8:01 PM IST

தூத்துக்குடி: வேம்பாரிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 1.5 டன் விரலி மஞ்சளை கைப்பற்றிய காவல் துறையினர், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1.5 டன் விரலி மஞ்சள் பறிமுதல்
1.5 டன் விரலி மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள வேம்பார் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல் ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர் தாமரைட்செல்வி, சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் இன்று (டிச.09) காலை கடற்கரையோரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது வேம்பார் பெரியசாமிபுரம் கடற்கரை இடையே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், டிராக்டர் ஆகியவற்றை சோதனையிட்டனர். அப்போது டிராக்டரில் 34 சாக்கு மூட்டைகளில் 1.5 டன் விரலி மஞ்சள் இருந்தன.

வேம்பாரிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகளை சிலர் எடுத்துவந்தது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சளை, கடலோர காவல் துறையினர், அவற்றை சூரன்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூரன்குடி காவல் துறையினர், விரலி மஞ்சள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுங்கத்துறைக்கு பயந்து தங்கத்தை விமானத்திலேயே பதுக்கியவர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள வேம்பார் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல் ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர் தாமரைட்செல்வி, சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் இன்று (டிச.09) காலை கடற்கரையோரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது வேம்பார் பெரியசாமிபுரம் கடற்கரை இடையே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், டிராக்டர் ஆகியவற்றை சோதனையிட்டனர். அப்போது டிராக்டரில் 34 சாக்கு மூட்டைகளில் 1.5 டன் விரலி மஞ்சள் இருந்தன.

வேம்பாரிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகளை சிலர் எடுத்துவந்தது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சளை, கடலோர காவல் துறையினர், அவற்றை சூரன்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூரன்குடி காவல் துறையினர், விரலி மஞ்சள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுங்கத்துறைக்கு பயந்து தங்கத்தை விமானத்திலேயே பதுக்கியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.