ETV Bharat / state

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்

author img

By

Published : Nov 15, 2020, 2:04 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.15) தொடங்கியது.

யாகசாலை பூஜை
யாகசாலை பூஜை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற நாடு, மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து விரதமிருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி விழாவில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.15) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சன்னதிகளுக்கிடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு, யாகசாலை பூஜைகள் தொடங்கின. அங்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளவே கும்ப பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் யாகசாலையில் சுவாமி சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும்; யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சுப்ரமணியசுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து, 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் அதே இடத்தில் சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய இருநாள்கள் விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

யாகசாலை பூஜை
யாகசாலை பூஜை

ஊரடங்கு அமலில் உள்ளதால் அறநிலையத்துறை ஆணையரால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கந்த சஷ்டி விழா நடக்கிறது. பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVupEw/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம். விழா ஏற்பாடுகளை கோயிலின் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:குன்னூர் மாசாணியம்மனுக்கு 200 கிலோ இனிப்பில் அலங்காரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற நாடு, மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து விரதமிருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி விழாவில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.15) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சன்னதிகளுக்கிடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு, யாகசாலை பூஜைகள் தொடங்கின. அங்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளவே கும்ப பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் யாகசாலையில் சுவாமி சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும்; யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சுப்ரமணியசுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து, 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் அதே இடத்தில் சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய இருநாள்கள் விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

யாகசாலை பூஜை
யாகசாலை பூஜை

ஊரடங்கு அமலில் உள்ளதால் அறநிலையத்துறை ஆணையரால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கந்த சஷ்டி விழா நடக்கிறது. பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVupEw/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம். விழா ஏற்பாடுகளை கோயிலின் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:குன்னூர் மாசாணியம்மனுக்கு 200 கிலோ இனிப்பில் அலங்காரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.