தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திபட்டி சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒன்பது வயது சிறுமி ரம்யா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வராஜ் (40), சாந்தி (14), லாவண்யா (9) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கொப்பம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... திருச்சியில் இருசக்கர வாகனம் மோதியதில் குதிரை உயிரிழப்பு