ETV Bharat / state

குடிமராமத்து பணிகளில் அதிமுக முறைகேடு செய்கிறது - விவசாயிகள் குற்றச்சாட்டு - தூத்துக்குடி விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறிய விவசாயிகள், தங்களது கைகளை சங்கிலியால் கட்டி குறைதீர் கூட்டத்தில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 30, 2019, 6:30 AM IST

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். அங்கு விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.

அப்போது, குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடப்பததாக கூறி விவசாயிகள் திடீரென்று தங்களது கைகளில் இரும்பு சங்கிலியால் கட்டி வரிசையாக பதாகைகளை ஏந்தி ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மதிமுக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், தூத்துக்குடியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் ஆளும்கட்சியினர், விவசாயிகள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் முறைகேடு செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் குளங்களை தூர்வாரும் பேரில், சவுடு மண் அகற்றுவதாக கூறி மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மதிமுக விவசாயிகள் பேட்டி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். அங்கு விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.

அப்போது, குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடப்பததாக கூறி விவசாயிகள் திடீரென்று தங்களது கைகளில் இரும்பு சங்கிலியால் கட்டி வரிசையாக பதாகைகளை ஏந்தி ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மதிமுக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், தூத்துக்குடியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் ஆளும்கட்சியினர், விவசாயிகள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் முறைகேடு செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் குளங்களை தூர்வாரும் பேரில், சவுடு மண் அகற்றுவதாக கூறி மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மதிமுக விவசாயிகள் பேட்டி
Intro:குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடக்கிறது- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சங்கிலியால் கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்Body:
தூத்துக்குடி

குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக மதிமுக விவசாயிகள் சங்கத்தினர் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கைகளில் இரும்பு சங்கிலியால் கட்டி ஆட்சியர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மாதத்தில் மூன்றாவது வாரம் நடைபெறும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தூய்மைத்திட்டத்தில் விருதுபெற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பிலும், கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சார்பிலும் பொன்னாடை போர்த்தி மலர் கொத்து வழங்கி கௌரவப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பில் கைகளில் இரும்பு சங்கிளி கட்டிகொண்டு ஆட்சியர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி மதிமுக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் ஆளுங்கட்சியினர் விவசாயிகள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் முறைகேடு செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மேலும் விவசாய நிலங்களில் குளங்களை தூர்வாரும் பேரிலும் சவுடு மண் அகற்றுவதாக கூறியும் மணல் அள்ளி கொள்ளை அடிக்கப்படுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் இல்லாத பட்சத்தில் மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக தெரிவித்தனர்.

பேட்டி : நக்கீரன் (மதிமுக விவசாயிகள் அணி)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.