ETV Bharat / state

தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சி கிடையாது - கடம்பூர் ராஜு

author img

By

Published : Oct 22, 2019, 6:52 PM IST

தூத்துக்குடி: பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது.

அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்தார்.

பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகில் கதை தன்னுடையது எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கதைக்கு காப்புரிமை கோரினார். அதை நீதிமன்றம் ஏற்காததால், வழக்கை திரும்பப் பெற்றார்.

பிகில் பட போஸ்டர்
பிகில் பட போஸ்டர்

காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக கூடாது என அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காகவே கடைசி நேரத்தில் செல்வா வழக்கு தொடர்ந்ததாக பட நிறுவனம் மற்றும் அட்லி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக செல்வாவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையும் படிங்க:திரைத் துறையில் தடம் பதிக்க வரும் அல்பெரே புரொடெக்ஷன்ஸ்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது.

அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்தார்.

பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகில் கதை தன்னுடையது எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கதைக்கு காப்புரிமை கோரினார். அதை நீதிமன்றம் ஏற்காததால், வழக்கை திரும்பப் பெற்றார்.

பிகில் பட போஸ்டர்
பிகில் பட போஸ்டர்

காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக கூடாது என அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காகவே கடைசி நேரத்தில் செல்வா வழக்கு தொடர்ந்ததாக பட நிறுவனம் மற்றும் அட்லி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக செல்வாவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையும் படிங்க:திரைத் துறையில் தடம் பதிக்க வரும் அல்பெரே புரொடெக்ஷன்ஸ்!

Intro:பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை - விதியை மீறி ஒளிபரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் செ ராஜூ
Body:பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை - விதியை மீறி ஒளிபரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் செ ராஜூ


கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்

தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் கட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது. அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அரசு மருத்துமனையில் தான் சிகிச்சை பெற்றனர். அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற காரணத்தினால் தான் மூத்த தலைவர்கள் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இது முத்தராசனுக்கு தெரியாதா. அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பருவ கால மாற்றத்தினால் தொற்று நோய்கள் வருவது இயற்கை. அதை அரசு எவ்வாறு சமாளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். வராமல் தடுப்பது நம் கையில் இல்லை. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தவிர, மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று விட்டது. தற்போது அது மக்களுக்கு தெரிந்துவிட்டது. விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதியை அதிமுக கைப்பற்றும். இடைத்தேர்தலுக்காக யார் அதிகம் செலவு செய்தார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் தெரியும். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி பொய்யான தகவலைக் கூறி வருகிறார். அதிமுகவில் நாங்குநேரி தொகுதியில் அதிக செலவு செய்தது காங்கிரஸ் கட்சியினர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.