இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையோட்டி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலிலும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
இன்று அதிகாலை 5 மணிக்கே கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: