ETV Bharat / state

பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக்கொலை -  அதிகாலையில் நடந்த பயங்கரம்! - தூத்துக்குடி

தூத்துக்குடி:  தாளமுத்துநகரில் பொதுச் சுவருக்கு, பங்கு பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thaalamuthu nagar murder
thaalamuthu nagar murder
author img

By

Published : Nov 29, 2019, 11:33 AM IST

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 62). கூலித் தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நடராஜன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அந்தோணி முத்துவுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிய நடராஜன் பொதுச் சுவருடன் கூடிய, வீட்டைக் கட்டி குடியேறினார்.

தொடர்ந்து நடராஜன், பொதுச் சுவர் கட்டியதற்காக, அந்தோணி முத்துவிடம் பங்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அந்தோணி முத்து பணம் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவும் அந்தோணி முத்துவுக்கும் நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தோணி முத்து வழக்கம் போல், தனது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் உறங்க சென்றார். அதிகாலை அந்தோணி முத்து தெருவாசலில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு, அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து, தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்தோணி முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக்கொலை

இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொதுச் சுவருக்கு பங்குப் பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், அதிகாலை நேரத்தில் மாட்டுத் தொழுவத்தில் உறங்கிக் கொண்டிருந்த, அந்தோணி முத்துவை அரிவாளால் வெட்டி, படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தாளமுத்து நகர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை - திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 62). கூலித் தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நடராஜன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அந்தோணி முத்துவுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிய நடராஜன் பொதுச் சுவருடன் கூடிய, வீட்டைக் கட்டி குடியேறினார்.

தொடர்ந்து நடராஜன், பொதுச் சுவர் கட்டியதற்காக, அந்தோணி முத்துவிடம் பங்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அந்தோணி முத்து பணம் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவும் அந்தோணி முத்துவுக்கும் நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தோணி முத்து வழக்கம் போல், தனது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் உறங்க சென்றார். அதிகாலை அந்தோணி முத்து தெருவாசலில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு, அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து, தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்தோணி முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக்கொலை

இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொதுச் சுவருக்கு பங்குப் பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், அதிகாலை நேரத்தில் மாட்டுத் தொழுவத்தில் உறங்கிக் கொண்டிருந்த, அந்தோணி முத்துவை அரிவாளால் வெட்டி, படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தாளமுத்து நகர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை - திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:தூத்துக்குடி தாளமுத்துநகரில் பொதுசுவருக்கு பங்கு பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக்கொலை - அதிகாலையில் நடந்த பயங்கரம்
Body:
தூத்துக்குடி


தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 62). கூலி தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நடராஜன்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு
அந்தோணி முத்துவுக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிய நடராஜன் பொது சுவருடன் கூடிய வீட்டை கட்டி குடியேறினார். தொடர்ந்து நடராஜன், பொது சுவர் கட்டியதற்காக, அந்தோணி முத்துவிடம் பங்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்தோணி முத்து பணம் தர மறுத்ததாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவும் அந்தோணி முத்துவுக்கும்- நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தோணி முத்து வழக்கம் போல் தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் உறங்க சென்றார். இந்தநிலையில் இன்று அதிகாலை அந்தோணி முத்து தெருவாசலில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தோணி முத்து உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், பொது சுவருக்கு பங்கு பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், அதிகாலை நேரத்தில் மாட்டு தொழுவத்தில் உறங்கி கொண்டிருந்த அந்தோணி முத்துவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே, அந்தோணிமுத்து வளர்ப்பு நாய் ஒன்று, அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே நின்றுக்கொண்டு யாரையும் உள்ளே விடாமல் விசுவாசம் வெளிப்படுத்தியது அனைவருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கொலை தொடர்பான புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.