ETV Bharat / state

‘திமுகவின் எடுபிடி டி.ராஜா அதிமுகவை விமர்சிப்பதா?’ - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: திமுகவின் எடுபிடியாக செயல்படும் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா அதிமுகவை விமர்சிக்க தகுதியில்லாதவர் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Aug 17, 2019, 7:53 PM IST

minister kadampur raju

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில், கோவில்பட்டி, சென்னை, மதுரை, வேளாங்கண்ணி, எர்ணாகுளம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இயங்கக் கூடிய புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘திமுகவை பொறுத்தவரை, ஸ்டாலினாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் சரி அவர்களது லட்சியம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்களே தவிர மக்கள் பணியை செய்ய விரும்பவில்லை. அதிமுகவை குறை கூறுவதை தவிர்த்து திமுகவினர் மக்கள் பணியை செய்ய நேர்ந்தால் நல்லது’ என்று விமர்சித்து பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் டி.ராஜா இத்தகைய விமர்சனங்களை தெரிவிப்பது அர்த்தமற்றது’ என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில், கோவில்பட்டி, சென்னை, மதுரை, வேளாங்கண்ணி, எர்ணாகுளம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இயங்கக் கூடிய புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘திமுகவை பொறுத்தவரை, ஸ்டாலினாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் சரி அவர்களது லட்சியம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்களே தவிர மக்கள் பணியை செய்ய விரும்பவில்லை. அதிமுகவை குறை கூறுவதை தவிர்த்து திமுகவினர் மக்கள் பணியை செய்ய நேர்ந்தால் நல்லது’ என்று விமர்சித்து பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் டி.ராஜா இத்தகைய விமர்சனங்களை தெரிவிப்பது அர்த்தமற்றது’ என்று தெரிவித்தார்.

Intro:காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
Body:
தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை வந்தார்‌. தொடர்ந்து, தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கோவில்பட்டி, சென்னை, மதுரை, வேளாங்கண்ணி, எர்ணாகுளம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வார அரசு உத்தரவு பிறப்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் ஆங்காங்கே நீர் நிலைகள், குளம், குட்டைகள் தூர்வாரப்படும்போது கிடைக்கும் வண்டல் மண்ணையும் விவசாயிகளுக்கு சொந்த இடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 500 குளங்கள் தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு மருவமழை முன்னதாகவே தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன. ஒவ்வொரு துறை வாரியாக பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் போக்குவரத்து துறையின் சார்பில் பழைய பேருந்து மாற்றி புதிய பேருந்துகளை இயக்கும் விதமாக இன்று தூத்துக்குடி மாவட்ட பணிமனைக்கென்று வழங்கப்பட்ட 14 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பயணிகளுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும். திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய பேருந்து இயக்க பட்டுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகம் இருப்பதைக் சுட்டிக்காட்டி அணையிலிருந்து கார்கால சாகுபடிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்துள்ளோம்.

கடலில் ஆற்று நீர் வீணாக கலப்பதை தடுக்க புன்னகாயலில் தடுப்பணை கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சாத்தான்குளம், விளாத்திகுளம் உப்போடை நீர் வழித் தடத்தில் ஆங்காங்கே தடுப்பணை அமைத்து நீரை சேமிக்கும் பணி திட்டம் உள்ளது.


திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ஸ்டாலினாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் அவர்கள் லட்சியம் ஆட்சி, அதிகாரம் இது ஒன்று தான்.

ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்களே தவிர மக்கள் பணியை செய்யவில்லை.
அதிமுகவை குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக மக்கள் பணியை செய்ய நேர்ந்தால் நல்லது.

டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அதிமுக. இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் அவர்கள் இத்தகைய விமர்சனங்களை தெரிவிக்க வேண்டாம். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காமல் போனதற்கு காரணம் காங்கிரஸ் தான்.

ஒரே நாடு, ஒரே தேசத்தை மத்திய அரசு கொள்கையாக வைத்துள்ளது. அது மத்திய அரசின் நிலைபாடு. காஷ்மீருக்கு தனி சட்டம் தேவையில்லை என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். ஆகவே நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.