ETV Bharat / state

உயரதிகாரிகள் டார்ச்சர்: காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை! - police

தூத்துக்குடி: புதுக்கோட்டை அருகே ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த உமையொருபாகம்(53) எனும் காவல் உதவி ஆய்வாளர், உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்
author img

By

Published : Feb 13, 2019, 11:58 PM IST

Updated : Feb 14, 2019, 12:06 AM IST

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் உமையொருபாகம். இவருக்கு உயரதிகாரிகள் அதிகப்படியான பணிகளை ஒதுக்கி பனிச்சுமையை அதிகப்படித்தியதாக தெரிகிறது.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உமையொருபாகம் மூன்று நாள் விடுப்பு கேட்டதற்கு, அதிகாரிகள் தர மறுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான ராமச்சந்திரபுரத்துக்கு வந்துள்ளார்.



விடுப்பில் வந்த பிறகும் உயரதிகாரிகள் தொலைபேசி மூலம் மேலும் அழுத்தம் கொடுத்ததால், வெறுப்புற்ற உமையொருபாகம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அவரது மகள் ஸ்ரீதேவி, தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உதவி ஆய்வாளர் உமையொருபாகத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகளுக்கான பணிப்பலன்கள் அதிகமாக கிடைக்கப் பெறுகிறது என்றாலும் , அவர்களுக்கான பனிச்சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலதிகாரிகளின் டார்ச்சராலும், அதிகமான பனிச்சுமையாலும் கடந்த 10 ஆண்டுகளில் 296 போலீசார் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் உமையொருபாகம். இவருக்கு உயரதிகாரிகள் அதிகப்படியான பணிகளை ஒதுக்கி பனிச்சுமையை அதிகப்படித்தியதாக தெரிகிறது.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உமையொருபாகம் மூன்று நாள் விடுப்பு கேட்டதற்கு, அதிகாரிகள் தர மறுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான ராமச்சந்திரபுரத்துக்கு வந்துள்ளார்.



விடுப்பில் வந்த பிறகும் உயரதிகாரிகள் தொலைபேசி மூலம் மேலும் அழுத்தம் கொடுத்ததால், வெறுப்புற்ற உமையொருபாகம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அவரது மகள் ஸ்ரீதேவி, தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உதவி ஆய்வாளர் உமையொருபாகத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகளுக்கான பணிப்பலன்கள் அதிகமாக கிடைக்கப் பெறுகிறது என்றாலும் , அவர்களுக்கான பனிச்சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலதிகாரிகளின் டார்ச்சராலும், அதிகமான பனிச்சுமையாலும் கடந்த 10 ஆண்டுகளில் 296 போலீசார் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:உயர் அதிகாரிகள் டார்ச்சரால் போலீஸ் அதிகாரி தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்


Body:தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உமையொருபாகம் (வயது 53). சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உயர் அதிகாரிகள் அதிக அளவில் பணிச்சுமை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தொடர்ந்து ஆற்றுப்படுத்தலுக்காக அவர் சொந்த ஊருக்கு சென்று வர விரும்பினார்.
இதற்காக அதிகாரிகளிடம் மூன்று நாள் விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு உயரதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுத்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் மருத்துவ விடுப்பு முறையில் உமையொருபாகம் சொந்த ஊரான ராமச்சந்திரபுரத்துக்கு வந்தார். ஆனாலும் போன் மூலமாக உயரதிகாரிகள் அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் வெறுப்புற்ற அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய மகள் ஸ்ரீதேவி புதுக்கோட்டை போலிசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட உமையொருபாகத்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Conclusion:
Last Updated : Feb 14, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.