ETV Bharat / state

போதையில் தகராறு செய்த மகன் - வெட்டி கொலை செய்த தந்தை

author img

By

Published : Sep 17, 2022, 7:53 PM IST

குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat தகராறு செய்த மகனை கொன்ற தந்தை
Etv Bharat தகராறு செய்த மகனை கொன்ற தந்தை

தூத்துக்குடி: கோவில்பட்டி காட்டு ராமன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அதில் இளைய மகன் முத்துக்குமார் (27), வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு வீட்டிற்கு மதுபோதையில் வந்த முத்துக்குமார் முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முத்துக்குமார் தந்தை முத்துராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதிலிருந்து தப்பித்த முத்துராஜ் மகனை கீழே தள்ளி அதே அரிவாளை பிடிங்கு அவரை சரமாரியாக தாக்கினார். அதில் படுதாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் முத்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆறு நாட்களில் புதுமணத்தம்பதி தற்கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி காட்டு ராமன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அதில் இளைய மகன் முத்துக்குமார் (27), வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு வீட்டிற்கு மதுபோதையில் வந்த முத்துக்குமார் முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முத்துக்குமார் தந்தை முத்துராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதிலிருந்து தப்பித்த முத்துராஜ் மகனை கீழே தள்ளி அதே அரிவாளை பிடிங்கு அவரை சரமாரியாக தாக்கினார். அதில் படுதாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் முத்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆறு நாட்களில் புதுமணத்தம்பதி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.