ETV Bharat / state

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’ - சிஏஏ போராட்டங்கள்

தூத்துக்குடி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’
‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’
author img

By

Published : Jan 29, 2020, 10:01 PM IST

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது கனிமொழி, மத்தியில் பலம் இருக்கிறது என்ற காரணத்தை வைத்துகொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களை பாஜக தன் போக்கில் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் பயத்தை, பிரிவினைவாதத்தை கொண்டுவரும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறார்கள். குடியுரிமை சட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டை கொளிந்தளிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குடியுரிமை சட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருகோடி கையெழுத்து வாங்கும் இயக்கம் வரும் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த சட்டத்தை திரும்பப்பெற குடியரசுத் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். தூத்துக்குடியில் மட்டும் 2 லட்சம் கையெழுத்து பெறப்படும் என்றார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது கனிமொழி, மத்தியில் பலம் இருக்கிறது என்ற காரணத்தை வைத்துகொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களை பாஜக தன் போக்கில் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் பயத்தை, பிரிவினைவாதத்தை கொண்டுவரும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறார்கள். குடியுரிமை சட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டை கொளிந்தளிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குடியுரிமை சட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருகோடி கையெழுத்து வாங்கும் இயக்கம் வரும் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த சட்டத்தை திரும்பப்பெற குடியரசுத் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். தூத்துக்குடியில் மட்டும் 2 லட்சம் கையெழுத்து பெறப்படும் என்றார்.

Intro:குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் - பிப்ரவரி 2ம் தேதி தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தொடங்கி வைக்கிறார்
Body:குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் - பிப்ரவரி 2ம் தேதி தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி மத்தியில் இருக்கும் பாஜக பலம் இருக்கிறது என்ற காரணத்தை வைத்துகொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களை  தான் போக்கில் நிறைவேற்றி கொண்டு வருகிறது மக்கள் மத்தியில் பயத்தை பிரிவினை வாதத்தை கொண்டு வரும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறார்கள் குடியுரிமை சட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ராஜ்யசபையில் அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டை கொளிந்தளிக்கும் சூழ்நிலைக்கு அதிமுக கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களில் பேசிய கனிமொழி குடியுரிமை சட்டத்திற்கு ஏதிராக மக்களின் எதிர்பை குடியரசுத்தலைவருக்கு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருகோடி கையெழுத்து வாங்கும் இயக்கம் வரும் 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த சட்டத்தை திரும்பபெற குடியரசுத்தலைவர் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். தூத்துக்குடியில் மட்டும் 2 லட்சம் கையெழுத்து பெறப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.