ETV Bharat / state

மாணவன் தூக்கிட்டு தற்கொலை: ஆன்லைன் வகுப்பால் நேர்ந்த சோகம்!

author img

By

Published : Oct 22, 2020, 11:27 PM IST

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்கி தராததால் 10 வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவன் தூக்கிட்டு தற்கொலை: ஆன்லைன் வகுப்பால் நேர்ந்த சோகம்!
School student dead due to online clases

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி சுடலைமணி.

இவரது மகன் முருகப்பெருமாள் (16), அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு முருகப்பெருமாள் தனது தந்தையிடம் கேட்டார். அதற்கு பணம் இல்லை என்று அவர் தந்தை கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த முருகப்பெருமாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி சுடலைமணி.

இவரது மகன் முருகப்பெருமாள் (16), அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு முருகப்பெருமாள் தனது தந்தையிடம் கேட்டார். அதற்கு பணம் இல்லை என்று அவர் தந்தை கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த முருகப்பெருமாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.