தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டு பகுதியில் உள்ள கிணற்றில், தூக்கில் தொங்கிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த நபர் யார்? எப்படி இறந்தார்? போன்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை