ETV Bharat / state

திமுகவிற்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி பேச்சு!

author img

By

Published : May 3, 2019, 11:14 PM IST

Updated : May 3, 2019, 11:52 PM IST

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக இனி போட்டியிடவே நினைக்கக்கூடாது என்கிற அளவிற்கு வரும் இடைத்தேர்தலில் மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் என பரபரப்புரையின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தூத்துக்குடி

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் திமுக, அதிமுக இருகட்சிகளும் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அதிமுக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள் என எதனையும் குறைக்கவில்லை.

பரபரப்புரை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை

மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு பக்கம் திமுகவும், மறுபக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக மாறி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டப்பிடாரம் என்றுமே அதிமுகவின் கோட்டையாகதான் உள்ளது. இந்த கோட்டைக்குள் திமுகவிற்கு வேலையில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக இனி எந்த காலத்திலும் போட்டியிடவே நினைக்கக்கூடாது என்கிற அளவிற்கு வாக்காளர்கள் திமுகவிற்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் என்றார்.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் திமுக, அதிமுக இருகட்சிகளும் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அதிமுக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள் என எதனையும் குறைக்கவில்லை.

பரபரப்புரை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை

மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு பக்கம் திமுகவும், மறுபக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக மாறி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டப்பிடாரம் என்றுமே அதிமுகவின் கோட்டையாகதான் உள்ளது. இந்த கோட்டைக்குள் திமுகவிற்கு வேலையில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக இனி எந்த காலத்திலும் போட்டியிடவே நினைக்கக்கூடாது என்கிற அளவிற்கு வாக்காளர்கள் திமுகவிற்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் என்றார்.



ஓட்டப்பிடாரம். மே, 4; ஓட்டப்பிடாரம் தொகுதியில்  திமுக இனி எந்த காலத்திலும் போட்டியிடவே நினைக்கக்கூடாது அந்த அளவிற்கு வாக்காளர்கள் திமுகவிற்கு  தேர்தலில் மரண  அடி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மோகன் போட்டியிடுகின்றார். மோகனுக்கு ஆதரவாக காயல்ஊரணி தருவைகுளம், ஏ,எம்,பட்டி, புதியம்புத்தூரில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர்ராஜூ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட கழகம் யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்பு கோட்டையாகும். 4 கிராம் தங்கம், அத்துடன் ரூ.25,000 திருமண நிதி உதவி, பட்டதாரி பெண்கள் என்றால் அவர்களுக்கு 8 கிராம் தங்கத்துடன் சேர்த்து ரூ.50000 நிதி உதவியை வழங்கினார். இன்றைக்கு நல்லாட்சி நடத்தி வரும் அதிமுக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள் என எந்தவொரு திட்டத்தையும் குறைக்கவில்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற துரோகிகளும் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அதிமுக, தொண்டர்கள் கட்சி. இன்றைக்கும் தொண்டர்களால் இயக்கப்படும் ஒரு மாபெரும் இயக்கம். தற்போது ஸ்டாலின் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறி வருகிறார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் ஆலமர விழுதுபோல் படர்ந்துள்ளனர். எப்படி காணாமல் போகும். ஓட்டப்பிடாரம் என்றுமே அதிமுகவின் கோட்டையாகதான் உள்ளது. இந்த கோட்டைக்குள் திமுகவிற்கு வேலையில்லை.   ஓட்டப்பிடாரம் தொகுதியில்  திமுக இனி எந்த காலத்திலும் போட்டியிடவே நினைக்கக்கூடாது என்றும் அந்த அளவிற்கு வாக்காளர்கள் திமுகவிற்கு தேர்தலில் மரண  அடி கொடுக்க வேண்டும் என்றார்.
Last Updated : May 3, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.